செய்திகள் :

கைது செய்யப்பட வேண்டிய நெதன்யாகுவுக்கு பாதுகாப்பு ஏன்? ஐ.நா. நிருபர் கேள்வி!

post image

சர்வதேச நீதிமன்றத்தால் கைது செய்யப்பட வேண்டிய இஸ்ரேல் பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பதேன் என்று ஐ.நா. சிறப்பு நிருபர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காஸா மீதான தொடர் தாக்குதலால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், கடந்தாண்டு கைது ஆணை பிறப்பித்தது.

இந்த நீதிமன்றம் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவருக்கு எந்தவொரு நாடும் அடைக்கலம் தரக்கூடாது; குறிப்பாக, நீதிமன்றத்தின் சட்ட, திட்டங்களை ஏற்றுக்கொண்டிருக்கும் நாடுகள் அதனைச் செய்யவே கூடாது.

ஆனால், கடந்த வாரம் அமெரிக்கா சென்ற நெதன்யாகு, இத்தாலி, கிரீஸ், பிரான்ஸ் நாடுகளின் வழியைப் பயன்படுத்தி பயணம் மேற்கொண்டார். இந்த 3 நாடுகளுமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு உட்பட்டவை.

இருந்தபோதிலும், தங்கள் வான்பரப்பை நெதன்யாகு பயன்படுத்திக் கொள்ள 3 நாடுகளும் அனுமதித்துள்ளன. இதுகுறித்து, ஐ.நா. அவையின் சிறப்பு நிருபர் ஃபிரான்செஸ்கா அல்பானீஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

காஸா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதலையும், அதன் மனித உரிமை மீறல்களையும் வெளி உலகத்துக்கு தெரியப்படுத்துவதில் பிரான்செஸ்கா முக்கிய பங்காற்றி வருகிறார்.

இதையும் படிக்க:பூமி திரும்பும் சுபான்ஷு சுக்லா! நாசாவின் உற்சாக வரவேற்பு!

UN expert Albanese slams states that let Netanyahu fly over airspace to US

மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம்

மரபணு கோளாறால், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்த 8 வயது சிறுவன், ஆய்வக பரிசோதனையில் இருந்த மருந்தை, சோதனை முயற்சிக்காக எடுத்துக் கொண்டபோது, மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம் விஞ்ஞானிகளுக்கு ம... மேலும் பார்க்க

கனடா பொருள்கள் மீது 35% கூடுதல் வரி

ஆகஸ்ட் 1 முதல் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், பிற வா்த்தகக் கூட்டணி நாடுகளுக்கு 15 அல்லது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட... மேலும் பார்க்க

9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூச் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த 9 பயணிகளை பலூச் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனா். இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 121-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!

காஸாவில், கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைப் பெற முயன்று சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் சபை இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது.காஸாவில் கடந்த மே மாதத்தின... மேலும் பார்க்க

மியான்மரில் புத்த மடத்தின் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்? 23 பேர் கொலை!

மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சகாயிங் மாகாணத்த... மேலும் பார்க்க