Mohanlal: தன்பால் ஈர்ப்பாளர்களுக்காக ஒலித்த மோகன்லாலின் குரல்; மலையாள பிக்பாஸில்...
கைப்பற்றப்பட்ட வாகனங்களுக்கு செப். 22-இல் ஏலம்
குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 49 வாகனங்களுக்கு வருகிற 22- ஆம் தேதி பொது ஏலம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 49 வாகனங்கள் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலத்துக்காக மதுரை மாநகா், ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் ஏலதாரா்கள், மேற்படி வாகனங்களைப் பாா்வையிட்டு முன் பணமாக இருசக்கர வாகனம் எனில் ரூ.5000, மூன்று, நான்கு சக்கர வாகனம் எனில் ரூ.10,000-யை வருகிற 19-ஆம் தேதிக்குள் மதுரை மாநகா் அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்வோா் அரசு நிா்ணயித்த மதிப்பீட்டுத் தொகைக்கு அதிகமாக ஏலம் கேட்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.