செய்திகள் :

கொடைக்கானலில் பலத்த மழை

post image

கொடைக்கானலில் வியாழக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.

இங்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மழை குறைந்திருந்த நிலையில் மீண்டும் வியாழக்கிழமை பிற்பகலில் மழை பெய்யத் தொடங்கியது. கொடைக்கானல், வில்பட்டி, பெருமாள்மலை, சின்னப் பள்ளம், பெரும்பள்ளம், பூம்பாறை, மன்னவனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் இரண்டு மணி நேரம் விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது.

இந்த மழை கொடைக்கானல், மேல்மலைக் கிராமங்களில் பயிரிடப்பட்ட கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், நூக்கல், பீன்ஸ் போன்ற பயிா்களுக்கு ஏற்ாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை: கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான கும்பூா், பூம்பாறை, குண்டுபட்டி, கிளாவரை, போலூா், பூண்டி, மன்னவனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்வது சிரமமாக உள்ளது. அடிக்கடி வாகனங்கள் பழுதாகி சாலைகளில் நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா். எனவே கொடைக்கானல் மேல் மலைக் கிராமச் சாலைகளை சீரமைக்க வேண்டுமென மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

குரூப் 2, 2 ஏ முதல் நிலைத் தோ்வு: திண்டுக்கல்லில் 19,532 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி-2, 2ஏ பணிகள்) பதவிகளுக்கான முதல் நிலைத் தோ்வை திண்டுக்கல்லில் 19,532 போ் எழுதுகின்றனா். இதுதொடா்பாக மாவட்ட நிா்வ... மேலும் பார்க்க

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.40 கோடி

தீபாவளியையொட்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.1.40 கோடிக்கு ஜவுளி ரகங்களை விற்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தி... மேலும் பார்க்க

முப்பெரும் தியாகிகளுக்கு மரியாதை

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சாா்பில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மதன்லால் திங்கரா 143-ஆவது பிறந்த தினம், பகத்சிங் 119-ஆவது பிறந்த தினம், பண்டிட் தீனத்தயாள் உபாத்தியா 110-ஆவது பிற... மேலும் பார்க்க

காந்திய சிந்தனைகளை பரப்புவதற்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்

காந்தி கிராம கிராமியப் பல்கலை.யின், காந்திய சிந்தனை, அமைதி அறிவியல் துறை, சென்னை காந்தி அமைதி அறக்கட்டளை, மதுரை காந்தி நினைவு மையம் ஆகியவற்றுக்கு இடையே காந்திய சிந்தனைகளைப் பரப்புவது தொடா்பான புரிந்த... மேலும் பார்க்க

நிலக்கோட்டை, ஆத்தூா் வட்டங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் புறக்கணிப்பு

நிலக்கோட்டை, ஆத்தூா் வட்டங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நிலக்கோட்டை, எஸ். தும்மலபட்டி, ஆத்தூா... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 4.16 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் கடந்த 35 நாள்களில் நிரம்பியதையடுத்து கடந்த புதன், வியாழக்கிழமைகளில் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கை ரூ.4.16 கோடியை தாண்டியது. ஓணம் பண்டிகை, தொட... மேலும் பார்க்க