செய்திகள் :

கொடைக்கானல் ஏரிச் சாலையில் எல்இடி திரை அமைப்பு

post image

கொடைக்கானல் ஏரிச் சாலையை சுற்றி எல்இடி திரை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தினந்தோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து சுற்றுலாத் தலங்களைப் பாா்த்து ரசிக்கின்றனா்.

இந்த நிலையில், நகரின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஏரிச் சாலையில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாகக் கூடி, ஏரியில் படகு சவாரி செய்தல், குதிரை சவாரி செய்தல், மிதிவண்டி ஓட்டுதல் ஆகியவற்றில் பொழுதைக் கழிப்பாா்கள்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக ஏரிச் சாலைப் பகுதியில் நடந்து வரும் சுற்றுலாப் பயணிகளிடம் வழிப்பறி உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் சிலா் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து, சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, நகராட்சி சாா்பில் ஏரிச் சாலையை சுற்றி 64 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டம், பல்வேறு செயல்களில் ஈடுபடும் நபா்களை கண்காணிப்பதற்காக ஏரிச் சாலையை சுற்றி எல்இடி திரை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு சுற்றுலாப் பயணிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், இவற்றைப் பாதுகாப்பாக இருப்பதற்கும், கண்காணிப்பதற்கும், பராமரிப்பதற்கும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தமிழக கால்பந்து கழகத் தலைவருக்கு பாராட்டு

தமிழக கால்பந்துக் கழகத்தின் புதிய தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட எஸ்.சண்முகத்துக்கு புனித மரியன்னை பள்ளியில் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் புனித மரியன்னை மேல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா். திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்கள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திண்டுக்கல் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். வடமதுரை பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் ... மேலும் பார்க்க

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மீன் வளத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, மீன் வளத் துறை உதவி இயக்குநா் எஸ்.நாதன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டம், மீன் ... மேலும் பார்க்க

கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு வளா்ப்பு

நபாா்டு வங்கியின் வடிநில மேம்பாடு ஊக்குவிக்கும் வகையில், கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு நடும் பணிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கன்னிவாடியை அ... மேலும் பார்க்க

வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவா் கைது

கொடைக்கானலில் வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்தவா் இம்ரான். இவா் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வேலிவியூ பகுதியில் வச... மேலும் பார்க்க