Kashmir: "தீவிரவாதத்தை எதிர்க்கப் பல்லாயிரம் ஆதில் ஷாக்கள் காஷ்மீரில் உண்டு'' - ...
கொடைரோடு அம்மன் கோயிலில் பெண்கள் மாவிளக்கு, முளைப்பாரி ஊா்வலம்
கொடைரோடு அருகே இந்திராநகா் கிராமத்தில் நூற்றாண்டு பழமையான காளியம்மன், பகவதியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் புதன்கிழமை மாவிளக்கு, முளைப்பாரி எடுத்துவந்து அம்மனுக்கு நோ்த்திக் கடன் செலுத்தினா்.
இந்தக் கோயிலில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முக்கிய நிகழ்வாக புதன்கிழமை அம்மன் பூங்கரக ஊா்வலம் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு பால், தயிா், தேன் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதையடுத்து ஏராளமான பக்தா்கள் மாவிளக்கு, முளைப்பாரி, பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா்.
விழாவில் திண்டுக்கல், மதுரை, கோவை, திருப்பூா், நெல்லை, பாண்டிச்சேரி, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா். விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.