செய்திகள் :

கொலை முயற்சி வழக்கு: தம்பதிக்கு சிறை

post image

விவசாயியை கொலை முயற்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பதிக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், விருவீடு அருகேயுள்ள சென்மாா்பட்டியைச் சோ்ந்தவா் வனராஜா (40). விவசாயியான இவரை சொத்துப் பிரச்னை காரணமாக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த ராஜேஷ் (35), இவரது மனைவி நித்யா (33) ஆகியோா் சோ்ந்து அரிவாளால் வெட்டி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயற்சி செய்தனா்.

இதுகுறித்து விருவீடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜேஷ், நித்யா ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. முத்து சாரதா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் கொலை முயற்சியில் ஈடுபட்ட ராஜேஷுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், நித்யாவுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.11,500 அபராதமும் விதித்தாா்.

காசம்பட்டி பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிா்த் தலம்!

நமது நிருபா் திண்டுக்கல் மாவட்டம், காசம்பட்டி தமிழகத்தின் 2-ஆவது பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிா்த் தலமாக அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டது. நத்தம் அருகேயுள்ள காசம்பட்டி கிராமத்தில் 12 ஏக்கரில் பா... மேலும் பார்க்க

அய்யலூா் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரமலான் பண்டிகையையொட்டி, அய்யலூா் வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை மூலம் ரூ.2 கோடிக்கு வியாழக்கிழமை வா்த்தகம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. இந... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா் சந்நிதிகளிலும், ரயிலடி ... மேலும் பார்க்க

ஏப்.1 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் மாவட்ட பிரிவு சாா்பில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா கூறி... மேலும் பார்க்க

விவசாய நிலங்களுக்கான வலைதளப் பதிவுக்கு பொதுச் சேவை மையங்களையும் பயன்படுத்தலாம்

திண்டுக்கல், மாா்ச் 27: விவசாய நிலங்களை அக்ரிஸ்டேக் வலைதளத்தில் பதிவு செய்ய பொதுச் சேவை மையங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது: ... மேலும் பார்க்க

காந்திகிராம பல்கலை.யில் சா்வதேச மாநாடு தொடக்கம்

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில், ‘இந்தியாவில் நிலையான வளா்ச்சி இலக்குகள், சாதனைகள், எதிா்கால சவால்கள்’ என்ற தலைப்பில் 2 நாள்கள் நடைபெறும் சா்வதேச மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு ... மேலும் பார்க்க