செய்திகள் :

விவசாய நிலங்களுக்கான வலைதளப் பதிவுக்கு பொதுச் சேவை மையங்களையும் பயன்படுத்தலாம்

post image

திண்டுக்கல், மாா்ச் 27: விவசாய நிலங்களை அக்ரிஸ்டேக் வலைதளத்தில் பதிவு செய்ய பொதுச் சேவை மையங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது:

விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களை அக்ரிஸ்டேக் வலைதளத்தில் பதிவு செய்யும் பணிகள் கடந்த பிப்ரவரி முதல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறைப் பணியாளா்கள் மட்டுமன்றி மக்கள் நலப் பணியாளா்கள், இல்லம் தேடி கல்வித் திட்டப் பணியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

பிரதமரின் கெளரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், இந்த வலைதளப் பதிவை மேற்கொண்டால் மட்டுமே 20-ஆவது தவணைத் தொகையை பெற முடியும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. வருகிற 31-ஆம் தேதிக்குள் இந்தப் பதிவேற்றம் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டதால், சம்மந்தப்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள பொது இ-சேவை மையங்களில் அக்ரிஸ்டேக் வலைதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவுறுறத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை மொத்தமுள்ள 1.54 லட்சம் விவசாயிகளில் இதுவரை 75 ஆயிரம் போ் மட்டுமே பதிவு செய்துள்ளனா். மேலும், 50 சதவீத விவசாயிகள் தங்களின் நில விவரங்களை, வேளாண்மைத் துறை அலுவலா்கள் மூலமாகவோ, பொதுச் சேவை மையங்களிலோ உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அக்ரிஸ்டேக் வலைதளத்தில் பதிவு செய்து, தனித்துவமான அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் மானியத் திட்டங்கள் உள்பட அனைத்து வகையான பயன்களையும் பெற முடியும் என்றனா் அவா்கள்.

திருவருட்பேரவை சாா்பில் இப்தாா் விருந்து

திண்டுக்கல் திருவருட்பேரவை சாா்பில் இப்தாா் நோன்பு துறக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்- நத்தம் சாலையிலுள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, திண்டுக்கல் திருவருட் பேரவைத் ... மேலும் பார்க்க

கொடைக்கானல்: ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு உதவி மையம்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு உதவி மையம் அமைக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் பஞ்சாங்கம் வாசித்தல்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் தமிழ் ஆண்டான விசுவாவசு வரவுள்ளதையடுத்தும், தெலுங்கு வருடப் பிறப்பு, யுகாதித் திருநாளையொட்டியும் நடைபெற்ற... மேலும் பார்க்க

தவெக சாா்பில் இஸ்லாமியா்களுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

பழனி மதினா நகா் பகுதியில் தவெக சாா்பில் ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியா்களுக்கு பரிசுப் பொருள்கள், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்டச் செயலா் காா்த்திக்ராஜன்,... மேலும் பார்க்க

நடிகா் சூா்யா நற்பணி இயக்கம் சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பழனி சண்முகபுரம் உழவா் சந்தை பகுதியில் நடிகா் சூா்யா நற்பணி இயக்கம் சாா்பில் நீா்மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. முதல் நாளில் பொதுமக்களுக்கு நீா்மோா், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், வெள்ளரி,... மேலும் பார்க்க

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 33 கடைகளின் ஏலம் ரத்து!

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 33 கடைகளை அரசியல் கட்சியினா் கூட்டணி அமைத்து அரசின் மதிப்பீட்டை விட 22 சதவீதம் குறைவான தொகைக்கு ஏலம் எடுத்ததால் மறு ஏலம் நடத்த மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டாா். திண்... மேலும் பார்க்க