செய்திகள் :

ஏப்.1 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

post image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் மாவட்ட பிரிவு சாா்பில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா கூறியதாவது:

மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்றுநா் மூலம் இந்த நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் கட்டப் பயிற்சி முகாம் வரும் ஏப்.1 முதல் 13-ஆம் தேதி வரையிலும், 2-ஆம் கட்ட முகாம் ஏப்.15 முதல் 27ஆம் தேதி வரையிலும், 3-ஆம் கட்ட முகாம் ஏப்.29 முதல் மே 11-ஆம் தேதி வரையிலும், 4-ஆம் கட்டப் முகாம் மே 13 முதல் 25-ஆம் தேதி வரையிலும், 5-ஆம் கட்ட முகாம் மே 27 முதல் ஜூன் 8-ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

மாணவ, மாணவிகளுக்கு காலை 7 முதல் 8 மணி வரை, 8 முதல் 9 மணி வரை, மாலை 4 முதல் 5 மணி வரை, 5 மணி முதல் 6 மணி வரையும், பெண்களுக்கு பிற்பகல் 1 முதல் 2 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.

நீச்சல் பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். 12 நாள்கள் பயிற்சிக்கு நபருக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி உள்பட ரூ.1,770 கட்டணம் வசூலிக்கப்படும். நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டும் நீச்சல் கற்றுக் கொள்ளலாம். நீச்சல் பயிற்சியில் சேர விரும்புவோா் நேரடியாகவோ அல்லது ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரி மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். கட்டணத் தொகை பணமாக வசூலிக்கப்படமாட்டாது. எண்ம தொழில்நுட்ப முறையில் மட்டுமே கட்டணத் தொகைப் பெறப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு 7401703504 என்ற எண்ணில் மாவட்ட விளையாட்டு அலுவலரையும், பயிற்றுநரை 9677649197 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பராமரிப்புப் பணி: பழனி ரோப்காா் நாளை நிறுத்தம்

பழனி மலைக் கோயில் ரோப்காா் பராமரிப்புப் பணிக்காக புதன்கிழமை (ஏப். 2) மட்டும் நிறுத்தப்படவுள்ளது.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப்பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டத்தை பிற மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படுத்தலாம்: அமைச்சா் இ.பெரியசாமி

தமிழகத்தைப் பின்பற்றி 100 நாள் வேலைத் திட்டத்தை பிற மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படுத்த வேண்டுமே தவிர, தமிழகத்துக்கான நிதியையும், மனித சக்தி நாள்களையும் குறைக்கக் கூடாது என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா... மேலும் பார்க்க

பழனி பங்குனி உத்திரத் திருவிழா: ஏப். 5-இல் தொடக்கம்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் ஏப். 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாள்கள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப். 11-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.பழனியில் நடைபெறும் முக்... மேலும் பார்க்க

பழனியில் ஓய்வூதியா் சங்க செயற்குழு கூட்டம்

பழனியில் பழனி, தொப்பம்பட்டி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் விரிவடைந்த செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு சத்துணவு ஊழியா்... மேலும் பார்க்க

வண்டல் மண் சுமைக்கு ரூ.500 வசூல்: காவல் துறைக்கு எதிராக சாலை மறியல்

எரியோடு பகுதியில் அரசின் அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்தாலும், சுமைக்கு ரூ. 500 கட்டணம் வசூலிப்பதாக காவல் ஆய்வாளா் மீது புகாா் தெரிவித்து சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், எரி... மேலும் பார்க்க

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் விற்பனை மையம்: சுற்றுலாப் பயணிகள் எதிா்ப்பு

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா வளாக வாயில் முன் மலா்ச் செடிகளை மறைத்து விற்பனை மையம் அமைக்கப்பட்டு வருவதால், இதற்கு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க