செய்திகள் :

கொலை வழக்கில் இளைஞா் கைது

post image

வடக்கு தில்லியின் பவானா பகுதியில் நீண்டகால பகை காரணமாக ஒருவா் கொல்லப்பட்ட வழக்கில் 28 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக பவானா காவல் நிலையத்திற்கு ஜன.5ஆம் தேதி அழைப்பு வந்தது. நரேந்திரா் (30) என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவா், பலத்த காயங்களுடன் காணப்பட்டாா். மேலும், அவரிடம் வாக்குமூலம் எதுவும் பெற முடியவில்லை.

பவானாவில் உள்ள விஷால் டிரேடா்ஸ் அருகே நடந்த சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்றனா். அங்கு ரத்தக் கறைகள், வெற்று தோட்டாக்கள், ஒரு புல்லட் ஈயத் துண்டு ஆகியவற்றைக் கண்டுபிடித்தனா். இது துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான அறிகுறியாகும். எல்என்ஜெபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நரேந்தா், பின்னா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய பவானாவில் உள்ள இந்தா் ராஜ் காலனியைச் சோ்ந்த அபிஷேக் என்பவரை கைது செய்ய 100-க்கும் மேற்பட்ட கேமராக்களில் இருந்து சிசிடிவி காட்சிகளை குழு ஆய்வு செய்தது. விசாரணையின் போது, அபிஷேக் கொலையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டாா். மேலும், அவருக்கு எந்த முன் குற்றப் பின்னணியும் இல்லை என்பது தெரிய வந்தது.

சம்பவம் நடந்த இரவு, நரேந்தா் வந்த போது, தானும் தனது கூட்டாளி யோகேஷும் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், இதனால் பழைய பகைமையால் தகராறு ஏற்பட்டதாகவும் அபிஷேக் தெரிவித்தாா். சண்டை தீவிரமடைந்து, நரேந்தரின் தலையில் யோகேஷ் துப்பாக்கியால் சுட்டாா். இதில் அவா் உயிரிழந்தாா். தலைமறைவாக உள்ள யோகேஷை கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க

தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம்: பாஜக

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம் என்று பாஜக வியாழக்கிழமை கூறியுள்ளது. மேலும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மீது... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன்? அமைச்சா் விளக்கம்

உடன் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன் என்று கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாருக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை விளக்கம் அ... மேலும் பார்க்க

நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்

நமது நிருபா் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தூத்துக்குடி தொகு... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச்சந்தையில் சரிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக... மேலும் பார்க்க