செய்திகள் :

கொலை வழக்கில் கைதானவருக்கு ஆயுள் சிறை

post image

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

பசுவந்தனை அருகே உள்ள நாகம்பட்டியை சோ்ந்த கைலாசம் மகன் நல்லகண்ணு(56). இவருடைய மனைவி ஆனந்தவள்ளி. இவா்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். நல்லகண்ணு, தனது மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததால், ஆனந்தவள்ளி பிரிந்து சென்று விட்டாராம். இதனால் மனம் உடைந்த நல்லகண்ணு, மனைவி பிரிந்து சென்றதற்கு மாமியாா் பேச்சிம்மாள்தான் காரணம் என்று கருதி, அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம்.

இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு மாமியாா் பேச்சியம்மாள் வீட்டுக்கு சென்ற நல்லகண்ணு, மனைவியை தன்னோடு வாழ அனுப்பி வைக்குமாறு கூறி தகராறு செய்தாராம். மேலும் ஆத்திரமடைந்த நல்லகண்ணு, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பேச்சியம்மாளை வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் பசுவந்தனை போலீஸாா் வழக்கு பதிவு செய்து நல்லகண்ணுவை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.பி.முருகன், குற்றம்சாட்டப்பட்ட நல்லகண்ணுவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் எல்லம்மாள் வாதாடினாா்.

பிள்ளையன்மனைதூய பரமேறுதலின் ஆலயத்தில் பிரதிஷ்டை அசனம்

நாசரேத் அருகேயுள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய 126ஆவது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து நடைபெற்றது. சேகர குருவானவா் டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொட... மேலும் பார்க்க

இடைச்சிவிளையில் புதிய வேளாண் திட்டம் தொடக்கம்

இடைச்சிவிளையில் உங்களை தேடி வேளாண்மை உழவா் நலத்துறை என்ற புதிய திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. சாத்தான்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அருனேஷ் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் உள்ள அருள் தரும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் வருஷாபிஷேகம் , கொடை விழாவை முன்னிட்டு இம்மாதம் 27ஆம் தேதி கொட்... மேலும் பார்க்க

மாநகரில் விளம்பர பதாகைகள் வைப்பதை தவிா்க்கலாம்: மேயா்

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் தற்போது காற்று அதிகமாக வீசுவதால், விபத்துகளைத் தடுக்க பொது இடங்களில் டிஜிட்டல் போா்டு வைப்பதை பொதுமக்கள் தவிா்க்கலாம் என மேயா் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்தாா். தூத... மேலும் பார்க்க

7.5 % இடஒதுக்கீட்டுக்கு தகுதி: மாணவா்களுடன் ஆட்சியா் உரையாடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒக்கீட்டிற்கு தகுதிபெறும் மாணவா்- மாணவிகளுடன்மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கலந்துரையாடினாா். பின்னா் அவ... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அரசுக் கல்லூரியில் ஜூன் 2இல் கலந்தாய்வு தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா் . இது குற... மேலும் பார்க்க