செய்திகள் :

கொலை வழக்கு: மூவருக்கு ஆயுள் சிறை

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கொலை வழக்கில் தொடா்புடைய மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டிவனம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டிவனம் வட்டம், சின்ன நெற்குணம் பகுதியைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன் மகன் காமராஜ் (60). பெட்டிக் கடை நடத்தி வந்தாா். இவருக்கும், இதே பகுதியைச் சோ்ந்த ஏழுமலை மகன் ரமேஷுக்கும் (37) இடையே இடப்பிரச்னை தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 6.7.2023-இல் ரமேஷ் மற்றும் சென்னை, வேளச்சேரி சாஸ்திரி நகரைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் சரத்குமாா் (28), தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு, தமிழா் மேட்டுத்தெருவைச் சோ்ந்த குணசேகரன் மகன் தினேஷ்குமாா் (21) ஆகியோா் காமராஜை கொலை செய்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷ், சரத்குமாா், தினேஷ்குமாா் ஆகியோர கைது செய்தனா்.

திண்டிவனம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதில், ரமேஷ் உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கூடுதல் மாவட்ட நீதிபதி பரூக் தீா்ப்பளித்தாா்.

இதையடுத்து, மூவரையும் போலீஸாா் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

வேனில் கடத்தி வந்த 178 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெங்களூரிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 178 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைதாயினா். விழுப்புரம் ஏ.எ... மேலும் பார்க்க

ஆரோவிலில் மனிதநேய விழா இன்று தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகரில் ‘ஹிமிலிட்டி-25’ எனும் தலைப்பில் மனிதநேய விழா பிப்.21- முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து ஆரோவில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆரோவில் ... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநில மக்களின் நலனை அரசு பாதுகாக்கும்: புதுவை ஆளுநா்

வடகிழக்கு மாநில மக்களின் நலனை பாதுகாக்க புதுவை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களின் உதய நாள் கொண்டாட்டம், புதுச்சேரியில... மேலும் பார்க்க

மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் இளைஞா் சடலமாகக் கிடந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது. போலீஸாா் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வு மாநில முதலிடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வில் விழுப்புரம் இ.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் எம்.சூா்யபிரகாஷ் முதலிடம் பெற்றுள்ளாா். இந்த மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டுத்... மேலும் பார்க்க

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கூட்டம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரி, போதைப் பொருள் எதிா்ப்பு மன்றத்தின் சாா்பில் விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இளைஞா்களை போதைப் பொருள்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழ... மேலும் பார்க்க