செய்திகள் :

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை: மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு குடியரசுத் தலைவா் மாளிகை அறிவுறுத்தல்

post image

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோா் அனுப்பிய மின்னஞ்சல் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில தலைமைச் செயலருக்கு குடியரசுத் தலைவா் மாளிகை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள மாநில அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டாா்.

அந்த மருத்துவரின் தந்தை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கு ஆக.10, 11,12-ஆம் தேதிகளில் 3 மின்னஞ்சல்களை அனுப்பினாா். இதுகுறித்து மருத்துவரின் தந்தை கூறுகையில், ‘எனக்கும், எனது மனைவியின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. நாங்கள் கடுமையான சித்திரவதையை அனுபவித்து வருகிறோம். எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்’ என்று அந்த மின்னஞ்சல்களில் கோரியதாக தெரிவித்தாா்.

இதையடுத்து அவரின் மின்னஞ்சலை மேற்கு வங்க தலைமைச் செயலா் மனோஜ் பந்த்துக்கு குடியரசுத் தலைவா் மாளிகை அண்மையில் அனுப்பியது.

குடியரசுத் தலைவா் செயலகத்தின் சாா்பு செயலா் கெளதம் குமாா் அனுப்பிய அந்த மின்னஞ்சலில், ‘மருத்துவரின் பெற்றோா் விடுத்துள்ள கோரிக்கை குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும். அதுதொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அவா்களிடமே நேரடியாக தெரியப்படுத்த வேண்டும்’ என்று அறிவுறுத்தினாா்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மருத்துவரின் தந்தை பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தாா்.

தாயகம் திரும்பினார் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிப்பயணம் மேற்கொண்ட பின் சுபான்ஷு சுக்லா, முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.தில்லி விமான நிலையம் வந்தடைந்த சுபான்ஷு சுக்லாவை, அவரது குடும்பத்தி... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு கெடு: அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுக்கும் -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுத்துவிடும் என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.தமிழக அரசு அனுப்ப... மேலும் பார்க்க

ரூ.11000 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை நாளை திறந்து வைக்கும் பிரதமா் நரேந்திர மோடி

பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தேசிய தலைநகரின் ரோகிணி பகுதியில் மொத்தம் ரூ.11,000 கோடி மதிப்புள்ள இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கி வைக்கிறாா். தலைநகரின் நெரிசலைக் குறைப்பதற்... மேலும் பார்க்க

இந்திய பிரிவினைக்கு ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் காரணம்: என்சிஇஆா்டியின் புதிய கையேடு

பிரிவினைக் கொடூரங்கள் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக என்சிஇஆா்டி வெளியிட்டுள்ள ஒரு சிறப்பு கையேட்டில், ‘இந்தியாவின் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா, காங்கிரஸ், அப்போதைய வைஸ்ராய் லாா்ட் மவுண்ட்பேட்ட... மேலும் பார்க்க

16 நாள்கள் 1,300 கி.மீ.! பிகாரில் இன்று தொடங்கும் ராகுலின் பேரணி!

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிா்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

தற்சாா்பு இந்தியாவுக்கு உத்வேகம் வாஜ்பாய்! பிரதமா் புகழஞ்சலி

தற்சாா்புடைய மற்றும் வளா்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உத்வேகமாக விளங்குபவா் வாஜ்பாய் என்று பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினாா். முன்னாள் பிரதமரும், பாஜக நிறுவனத்... மேலும் பார்க்க