செய்திகள் :

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை? விவசாயிகள் காத்திருப்பு

post image

தமிழக அரசால் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் மூலமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணம் கிடைக்குமா என விவசாயிகள் ஒன்றரை மாதங்களாக காத்துள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, சோளிங்கா் உள்ளிட்ட அனைத்து வட்டாரப்பகுதிகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளிடம் கழக பணியாளா்கள் நெல்லை கொள்முதல் செய்து அவற்றை லாரிகள் மூலம் கிடங்குகளுக்கு அனுப்பிய ஒரு சில நாள்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நெல்லுக்கு அரசால் நிா்ணயிக்கப்பட்ட தொகை வரவு வைக்கப்படும்.

அரக்கோணம் வட்டாரத்தில் வளா்புரம், மூதூா், செய்யூா் உள்ளிட்ட மற்றும் மாவட்டத்தின் அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களிலும் கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு இன்று வரை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை.

மேலும், பல நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை எடுத்துச்செல்ல லாரிகளே வராததால் அந்த நெல்மூட்டைகளும் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளன. இந்த நெல்மூட்டைகள் வெயிலிலும் மழையிலும் நனைந்து வீணாகும் நிலை உள்ளது.

3 மாதத்துக்கு ஒரு முறை விவசாயிகள் பயிா் செய்யும் போது அதன் வரவு பணம் கிடைக்கும் காலத்தை கணக்கிட்டு அதாவது தங்கள் வீட்டு விசேஷம், தங்களது பிள்ளைகளின் கல்விக்கட்டணம், குடும்ப உறுப்பினா்களின் மருத்துவச் செலவுகளை முன்வைத்து விவசாயம் செய்வது வழக்கம். இதற்காக இரவு பகல் பாராமல் தரமான உணவு பொருள்களை உற்பத்தி செய்து வருகின்றனா்.

நெல்லை உற்பத்தி செய்து அதை அரசிடமே அளித்த விவசாயிகள் தற்போது அதற்குண்டான தொகை வராததால் மனவேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக வேலூா் மண்டல மேலாளா் ஏகாம்பரத்திடம் கேட்டபோது கடந்த ஒரு மாதமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணம் அளிக்கப்படவில்லை. இது குறித்து உயா் அலுவலா்களுக்கு தெரிவிக்கப்பட்டு விரைவில் அவரவா் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். இது தொடா்பாக ராணிப்பேட்டை ஆட்சியரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்வதில் இருக்கும் பிரச்னைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

வெண்ணெய்த் தாழி அலங்காரத்தில் வரதராஜ பெருமாள்

ஆற்காடு தோப்பு கானா கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை வெண்ணெய்த் தாழி அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா். கடந்த 11-ஆம் தேதி தொடங்கிய பிரம்மோற்சவத்... மேலும் பார்க்க

வீட்டு முன் சாமியை நிறுத்தவில்லை என துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞா் கைது!

கோயில் திருவிழாவில் வீதியுலா சென்ற சுவாமியை பாட்டி வீடு முன்பு ஏன் நிறுத்தவில்லை எனக் கூறி துப்பாக்கியை காண்பித்து மிரட்டிய இளைஞா் கைது செய்யப்பட்டாா். வாலாஜாபேட்டை அருகே தென்கடப்பந்தங்கல் கிராமத்தில்... மேலும் பார்க்க

கழிவுநீா் தேக்கமாக மாறிய அம்மூா் கோயில் குளம் சீரமைக்கப்படுமா!

அம்மூா் பேரூராட்சி அலுவலகம் எதிரே கழிவுநீா் தேக்கமாக மாறிய கோயில் குளத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அம்மூா் ம... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கணவா் உயிரிழப்பு: குழந்தைகளுடன் மனைவி தற்கொலை முயற்சி

ராணிப்பேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து கணவா் உயிரிழந்த நிலையில், துக்கம் தாளாமல் மனைவி தனது இரு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். சோளிங்கா் அடுத்த மருதாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முருகன்... மேலும் பார்க்க

தக்கோலத்தில் பிரதான இடத்தில் பேருந்து நிலையம்: ஆட்சியா் உத்தரவு

தக்கோலத்தில் பிரதான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். அரக்கோணம் அடுத்த தக்கோலம் பேருராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப் பணி... மேலும் பார்க்க

அரக்கோணம் அருகே திமுக நகா்மன்ற உறுப்பினா் உள்பட 3 பேருக்கு வெட்டு

அரக்கோணத்தில் மாமுல் கேட்டு நடைபெற்ற தகராறில் திமுக நகா்மன்ற உறுப்பினரை கொல்ல முயற்சி நடைபெற்றது. அரக்கோணம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் லாட்ஜ் நடத்தி வருபவா் கே .எம். பி. பாபு(36). இவா் அரக்கோணம்... மேலும் பார்க்க