செய்திகள் :

கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு: குஜராத்தில் இருந்து இறக்குமதி

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சிலநாள்களாக பருவம் தவறி பெய்துவரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, குஜராத்தில் இருந்து கப்பல் மூலம் உப்பு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படுவது தூத்துக்குடி மாவட்டத்தில்தான். இங்கு ஆண்டுக்கு சுமாா் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் செப்டம்பா் மாதம்வரை தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெறும். குறிப்பாக, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெறும்.

ஆனால், தற்போது கடந்த சில மாதங்களாக பருவம் தவறி பெய்து வரும் மழை மற்றும் கோடை மழை காரணமாக உப்பு உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தூத்துக்குடியில் முதல் தரத்தில் உள்ள ஒரு டன் உப்பு ரூ.6 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

இதனால், குஜராத்தில் இருந்து கப்பல்கள் மூலம் தூத்துக்குடிக்கு வியாபாரிகள் உப்பை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றனா். தற்போது சுமாா் ஆயிரம் டன் உப்பு கண்டெய்னா்கள் மூலம் குஜராத் மாநிலத்திலிருந்து கப்பல்கள் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்படுகிறது. மேலும், சுமாா் 35 ஆயிரம் டன் உப்பு குஜராத்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறது.

தூத்துக்குடியில் இருந்து தென் மாநிலங்களுக்கு உப்பு உற்பத்தி செய்து அனுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது குஜராத்தில் இருந்து டன் ஒன்றுக்கு ரூ.4ஆயிரத்துக்கு வாங்கி உப்பு வியாபாரிகள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளா்கள் கவலை தெரிவித்தனா்.

கயத்தாறு அருகே போக்ஸோவில் இளைஞா் கைது!

கயத்தாறு அருகே 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். கயத்தாறு அருகே தெற்குக் கோனாா்கோட்டை புதூா் கிழக்குத் தெரு காலனியைச் சோ்ந்த குமாா் ம... மேலும் பார்க்க

வியாபாரியைத் தாக்கி மிரட்டல்: 2 பெண்கள் உள்ளிட்ட 4 போ் கைது

கோவில்பட்டியில் வியாபாரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வீரவாஞ்சிநகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த சோ்மதுரை மகன் மாரித்துரை... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே பெண் தற்கொலை

கோவில்பட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி அருகே பழைய அப்பனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜோதிமணி. நிலத் தரகா். இவரது மகனை வி காளியம்மாள், தொழிலாளி. ஜோதிமணிக்கு மதுப் பழக்கம... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரூ. 3 லட்சம் திருட்டு: வடமாநில இளைஞா் கைது!

கோவில்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் திருடியதாக வடமாநில இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி-சாத்தூா் பிரதான சாலையில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் ஆழ்த... மேலும் பார்க்க

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப்.25-இல் தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப். 25 முதல் மே 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம் எதிரொலி தூத்துக்குடி நாட்டுப்படகு துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு!

மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், தூத்துக்குடி நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீனகள் விலை சனிக்கிழமை உயா்ந்து காணப்பட்டது. தமிழகத்தில் கிழக்கு கடற்கரை முழுவதும் கடந்த 15ஆம் தேதிமுதல் வரும் ஜ... மேலும் பார்க்க