செய்திகள் :

கோட்டாவில் மற்றுமொரு நீட் மாணவி தற்கொலை! ஒரே ஆண்டில் 15-ஆவது மரணம்

post image

கோட்டாவில் மற்றுமொரு நீட் மாணவி தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவி ஜீஷான்(18). இவர் கோட்டாவில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக திங்கள்கிழமை போலீஸார் தெரிவித்தனர். இந்த ஆண்டில் கோட்டாவில் நடக்கும் 15வது சம்பவம் இதுவாகும்.

அதேசமயம் இந்த மாதத்தில் மட்டும் இரண்டாவது சம்பவமாகும். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, ஜீஷான் தனது உறவினரிடம் அதுகுறித்து தெரிவித்திருக்கிறார். உடனே அவர் அதே மாடியில் வசித்து வந்த மற்றொரு மாணவி மம்தாவை அழைத்து, ஜீஷானை பார்க்கச் சொல்லியிருக்கிறார்.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கியது!

அவர் சென்று பார்த்தபோது ஜீஷானின் அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். கதவை உடைத்து திறந்தபோது ஜீஷான் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இருப்பினும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஜீஷான் ஒரு மாதத்திற்கு முன்பு கோட்டாவுக்கு வந்தார். ஆரம்பத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வுக்குத் தயாராவதற்காக பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்தார். பிறகு அவர் தனியாகவே நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார். இவ்வாறு தெரிவித்தனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]. 

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க