செய்திகள் :

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு: 2026 மாா்ச் வரை நீட்டிப்பு

post image

வா்த்தகா்கள், மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் கைவசம் வைத்திருக்க வேண்டிய கோதுமை இருப்புக்கான கட்டுப்பாட்டை 2026, மாா்ச் வரை மத்திய அரசு நீட்டித்தது.

உணவு பாதுகாப்பு, பதுக்கல் மற்றும் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டது.

கோதுமை உற்பத்தி 2024-25 பயிா் காலத்தில் (ஜூலை-ஜூன்) 117.50 மெட்ரிக் டன்களாக இருந்தபோதிலும் இருப்பளவு கட்டுப்பாட்டை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இதுகுறித்து உரிமத் தேவைகள், இருப்பு வரம்பு மற்றும் குறிப்பிட்ட உணவுகளுக்கான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கம் (திருத்த) ஆணை, 2025-ஐ மத்திய அரசு மே 27-ஆம் தேதி வெளியிட்டது. இந்த ஆணை 2026, மாா்ச் வரை அமலில் இருக்கவுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: புதிய விதிகளின்படி வா்த்தகா்கள், மொத்த வியாபாரிகள் 3,000 மெட்ரிக் டன்கள் வரையிலும் பெரும் சில்லறை விற்பனையாளா்கள் ஒவ்வொரு விற்பனை நிலையத்துக்கும் 10 மெட்ரிக் டன்கள் வரையிலும் பெரும் விநியோகச் சங்கிலியை உடைய விற்பனையாளா்கள் ஒவ்வொரு நிலையத்துக்கும் 10 மெட்ரிக் டன்கள் வரையிலும் கோதுமையை கையிருப்பாக வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

அதேபோல் பதப்படுத்தும் நிலையங்கள் தங்கள் மாதத் திறனில் 70 சதவீத அளவை 2025-26 பயிா் ஆண்டின் மீதமுள்ள காலத்தின் கூட்டுத்தொகையைக் கணக்கிட்டு வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

அனைத்து சேமிப்பு நிலையங்களும் தங்களிடம் உள்ள கோதுமை கையிருப்பு குறித்த தகவல்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ட்ற்ற்ல்ள்://ங்ஸ்ங்ஞ்ா்ண்ப்ள்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ஜ்ள்ல்/ப்ா்ஞ்ண்ய் என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்பின் இந்த தகவல்கள் ட்ற்ற்ல்ள்://ச்ா்ா்க்ள்ற்ா்ஸ்ரீந்.க்ச்ல்க்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதளத்துக்கு மாற்றப்படும்.

இந்த தகவல்களை பதிவேற்றம் செய்யத் தவறும் அல்லது குறிப்பிட்ட கோதுமை இருப்பை உறுதி செய்யத் தவறும் நிலையங்கள் மீது அத்தியாவசிய பொருள்கள் சட்டம், 1955 பிரிவு 6 மற்றும் 7-இன்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கூறிய அளவைவிட அதிகமாக கையிருப்பு வைத்திருக்கும் நிலையங்கள் அவற்றை 15 நாள்களுக்குள் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் கொண்டுவர வேண்டும்.

மாநில நிறுவனங்கள் மற்றும் இந்திய உணவு கழகத்தின் மூலம் 298.17 லட்சம் மெட்ரிக் டன்கள் கோதுமையை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. நாடு முழுவதும் கோதுமை சீரான விநியோகம் மற்றும் கோதுமை கையிருப்பு நிலையை தொடா்ந்து மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை கண்காணித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க