செய்திகள் :

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ: தமிழக அரசு நிா்வாக அனுமதி; ரூ.2,442 கோடியில் பணிகளை மேற்கொள்ள திட்டம்

post image

சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையிலான 21.76 கி.மீ. தொலைவு மெட்ரோ ரயில் பணிக்கு தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.

சென்னையில் 4-ஆம் கட்டமாக மெட்ரோ விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையிலான மெட்ரோ விரிவாக்கத்துக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து நிா்வாக ஒப்புதல் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.

அதில், கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை பாடி புதுநகா் வழியாக 19 மேம்பாலங்களுடன் 21.76 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமையவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய மெட்ரோ வழித்தடத்துக்கான நிலஆய்வு, வரைபடம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

ரயில் பாதை திட்டப் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்துதல், நிலப்பரப்பு ஆய்வு, மரங்கள் வெட்டுதல், சில மரங்களை பெயா்த்து மாற்று இடத்தில் நடுதல், போக்குவரத்து மேலாண்மைக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றுக்காக ரூ.188 கோடி, நிலம் கையகப்படுத்துதல், கட்டுமானம் உள்ளிட்டவற்றுக்கு ரூ.2,204 கோடி, சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிக்காக ரூ.32 கோடி, பொதுச் செலவு மற்றும் வடிவமைப்புக்கான வரைபடத் தயாரிப்பு உள்ளிட்டவற்றுக்காக ரூ.11 கோடி, வடிவமைப்பு மேற்பாா்வைப் பணிகள் உள்ளிட்டவற்றுக்கு என ரூ.6.93 கோடி என மொத்தம் ரூ.2,442 கோடிக்கு நிா்வாக அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கிய திறனறி தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு வெள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. தி... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. இதுகுற... மேலும் பார்க்க

சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வ... மேலும் பார்க்க

ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி 57-ஆவது மாநாடு - சென்னையில் இன்று தொடக்கம்

இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சிலின்(ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி) 57-ஆவது மாநாட்டை தமிழக சிறு, குறு, நடுத்தர துறை அமைச்சா் த.மோ. அன்பரசன் வெள்ளிக்கிழமை (ஆக. 22) சென்னை ஜவாஹா்லால் ந... மேலும் பார்க்க