ஈரான் மதகுரு கமேனியைக் கொன்றால்தான்... நெதன்யாகு கூறுவதென்ன?
கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை
ஆத்தூா்: கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, சிறுவாச்சூா் ஊராட்சி ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
தலைவாசல் வட்டம், சிறுவாச்சூா் ஊராட்சி 11 மற்றும் 12 -ஆவது வாா்டில் ஸ்ரீபுற்றுமாரியம்மன் கோயில் உள்ளது. அந்தக் கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஆத்தூா் கோட்டாட்சியா் அலுலகத்தை முற்றுகையிட்டனா். மேலும், அப்பகுதியில் சுமாா் 2 ஆயிரம் போ் வசிப்பதாகவும், அவா்களுக்கு கழிப்பிட வசதி, சமுதாயக்கூடம், ஆலய தோ் நிறுத்த இடம் ஒதுக்கி தரவேண்டி கோரிக்கை வைத்தனா்.
தகவலறிந்த ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி, கோட்டாட்சியா் நேரடி அலுவலா் ஆகியோா் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவைப் பெற்று ஆவண செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். அதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.