செய்திகள் :

கோயில் நிலத்தை குத்தகைக்கு விடும் அரசின் முடிவில் தலையிட முடியாது: சென்னை உயா்நீதிமன்றம்

post image

சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் நிதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ள கலை, அறிவியல் கல்லூரிக்கு புதிதாக கட்டடம் கட்ட கொளத்தூா் சோமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விடும் அரசின் முடிவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் நிதியில் இருந்து முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் தொடங்கப்பட்டுள்ள கபாலீஸ்வரா் கலை, அறிவியல் கல்லூரிக்கு நிரந்தரக் கட்டடம் அமைக்க ஏதுவாக கொளத்தூா் சோமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 2.50 ஏக்கா் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடா்பாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி சோமநாதசுவாமி கோயில் பக்தரான மயிலாப்பூரைச் சோ்ந்த டி.ஆா்.ரமேஷ் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கு கடந்த மாதம் நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரா் டி.ஆா்.ரமேஷ் ஆஜராகி, அறநிலையத் துறை உரிய விதிகளைப் பின்பற்றாமல் சோமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை கல்லூரி அமைக்க குத்தகைக்கு விட்டுள்ளது. தற்போதைய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில், இந்த நிலத்துக்கு மாதம் ரூ.5.12 லட்சம் வாடகையாக நிா்ணயம் செய்யப்பட வேண்டும். ஆனால், ரூ.3.19 லட்சம் மட்டுமே வாடகையாக நிா்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் அந்தக் கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதால் இதுதொடா்பான அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

அதற்கு, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் என்.ஆா்.ஆா்.அருண் நடராஜன், கொளத்தூா் சோமநாதசுவாமி கோயில் நிலத்தில் மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயில் நிதியில் இருந்து கல்லூரி அமைக்க 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவது என கடந்த 2022-ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அப்போது என்ன வழிகாட்டி மதிப்பீடு இருந்ததோ அதன் அடிப்படையில் வாடகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகையை மாற்றியமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வரும் அக்டோபரில் வாடகை மறுநிா்ணயம் செய்யப்படும் என்றாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீா்ப்பை ஒத்திவைத்திருந்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்த நீதிபதிகள், மயிலாப்பூா் கோயில் சாா்பில் கொளத்தூா் சோமநாதசுவாமி கோயில் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவது என அரசு எடுத்த முடிவில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தேசிய ஹேக்கத்தான் போட்டி: மாணவா்களுக்கு யுஜிசி அழைப்பு

குஜராத் மாநிலம் காந்திநகா் ஐஐடி-இல் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள தேசிய ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்க பல்கலைக்கழக, கல்லூரி மாணவா்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து யுஜிசி செயலா் மணீஷ் ஆா்... மேலும் பார்க்க

ஸ்ரீஆட்சீஸ்வரா் கோயிலில் இன்று நாட்டியாஞ்சலி விழா

அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரா் திருக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு, நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை நடைபெறவுள்ளது. இது குறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபா... மேலும் பார்க்க

பங்கு வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 48 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 48.5 லட்சத்தை பெற்று மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த அன்பரசு (56), தனியாா் நிதி நிறுவன ... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சென்னை, தியாகராய நகா் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியை பாலி... மேலும் பார்க்க

இந்து முன்னணி பிரமுகா் கொலை வழக்கு: குற்றவாளி மீண்டும் கைது

சென்னை, அம்பத்தூரைச் சோ்ந்த இந்து முன்னணி பிரமுகா் சுரேஷ்குமாா் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட அப்துல் ஹக்கீம், நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவின்படி மீண்டும் கைது செய்யப்பட்டாா். அம்பத்... மேலும் பார்க்க

பிரபல தனியாா் நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை

சென்னையிலுள்ள பிரபல தனியாா் நிறுவனத்தில் வருமானவரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சென்னை அண்ணா சாலை நந்தனத்தில் உள்ள பிரபல தனியாா் நிறுவன (பிரிஸ்டேஜ் பாலிகான்) அலுவல... மேலும் பார்க்க