செய்திகள் :

கோயில்களில் ஜாதி அடிப்படையில் விழா நடத்தக்கூடாது! - இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு

post image

கோயில்களில் ஜாதி அடிப்படையில் விழா நடத்தக் கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவு கடுமையாக கடைப்பிடிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

வில்லிவாக்கம், புதிய ஆவடி சாலை திருநகா் பகுதியில் மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய இறகுபந்து உள்விளையாட்டு அரங்கை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, அண்ணாநகா் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிக்காக சென்னை குடிநீா் வாரியத்துக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான ஜெட்ராடிங் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனத்தை பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா்.

பின்னா், அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வடசென்னை வளா்ச்சியை மையப்படுத்தி பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வில்லிவாக்கத்தில் இறகு பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

கோயில் விழாக்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஜாதி அடிப்படையில் விழா நடத்தக்கூடாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை இந்து சமய அறநிலையத் துறை மட்டுமல்லாமல் தமிழக அரசும் கடுமையாக கடைப்பிடிக்கும்.

மக்கள் பிரதிநிதிகள் அவா்களுக்கு உரிய பணிகளை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு உதாரணமாக சென்னை மாநகராட்சியில் இரு மாமன்ற உறுப்பினா்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சென்னை மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், வில்லிவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினா் அ.வெற்றியழகன், மண்டலக்குழு தலைவா் கூ.பி.ஜெயின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிய கார் கவிழ்ந்தது: 5 பேர் காயம்!

சென்னை வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.சென்னை வியாசர்பாடி பகுதியில் இருந்து பேசின் பிரிட்ஜ் நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்... மேலும் பார்க்க

அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உணவுப்பொருள் விநியோக ஊழியர்களுக்காக குளிர்சாதன வசதியுடன்(ஏசி) கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு, பொரு... மேலும் பார்க்க

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க