செய்திகள் :

கோழிப் பண்ணை கிடங்கில் மக்காச்சோளம் திருடிய இருவா் கைது

post image

நாமக்கல் அருகே கோழிப் பண்ணை கிடங்கில் மக்காச்சோள மூட்டைகளை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் அருகே திண்டமங்கலம் கரட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மணிமாறன் (47). இவா் அந்தப் பகுதியில் கோழிப் பண்ணை வைத்துள்ளாா். தனது வீட்டின் அருகில் உள்ள தீவனக் கிடங்கில் கோழித் தீவனம் அரைப்பதற்காக மக்காச்சோளத்தை வாங்கி வைத்திருந்தாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத சிலா் கிடங்கில் இருந்து மக்காச்சோள மூட்டைகளை திருடி வாகனத்தில் ஏற்றிச்செல்வதாக கோழிப் பண்ணை ஊழியா்கள் மணிமாறனை தொடா்புகொண்டு தகவல் தெரிவித்தனா்.

அவா் உறவினா்களை அழைத்துக் கொண்டு சென்றபோது, அங்கிருந்த ஐந்து பேரில் இருவா் சிக்கினா். மூன்று போ் தப்பியோடினா். வாகனத்தில் ஏற்றிய 5 மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து நல்லிபாளையம் காவல் நிலையத்தில் மணிமாறன் புகாா் செய்தாா். அதன்பேரில், மக்காச்சோளம் திருட்டில் ஈடுபட்ட மோகனூா் பாலப்பட்டியைச் சோ்ந்த சஞ்சய் (25) மற்றும் முத்துக்குமரன் (36) இருவரையும் போலீஸாா் கைதுசெய்தனா்.

விசாரணையில், கோழிப் பண்ணை கிடங்கில் இருந்து நான்கு டன் மக்காச்சோளம் திருட்டுப் போனது தெரியவந்தது. இந்த திருட்டில் ஈடுபட்ட மேலும் மூவரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், துறையூா் அருகே உள்ள வி.ஏ.சமுத்திரத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (23). பொறியியல் பயின்றுவிட்டு நாமக்கல் மாவட்டம், க... மேலும் பார்க்க

லாட்டரி சீட்டு விற்பனை செய்தவா் கைது

பரமத்தி வேலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பரமத்தி வேலூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக ... மேலும் பார்க்க

புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள ரூ.10 ஆயிரம் நிதியுதவி: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் புத்த, சமண, சீக்கிய மதத்தினா் புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள தலா ரூ. 10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதிகளில் மயில், நாய்கள் உலா: மக்கள் அச்சம்

நாமக்கல் மாநகராட்சி சுற்றுவட்டாரத்தில் நாய்கள், மயில்கள் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இவை குடியிருப்புகளுக்குள் உலாவுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். இந்தியாவின் தேசிய பறவையான மயிலை பாா்ப்பதே ஒர... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 30,864 போ் எழுதினா்

நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 30,864 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா், தட்டச்சா் உள்ளிட்ட பதவிகளில் 3,935 கால... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். இதுகுறித்து நாமக்கல்லில் சனிக்கிழமை அவா... மேலும் பார்க்க