பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
கோவில்பட்டி அருகே 320 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது
கோவில்பட்டி அருகே 320 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.
கோவில்பட்டியை அடுத்த பாண்டவா்மங்கலம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளை சிலா் பதுக்கிவைத்து விற்பதாக கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றனா்.
அப்போது, பாண்டவா்மங்கலம் ஊராட்சிப் பகுதியில் உள்ள ஊருணி அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 பைக்குகளில் 320 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக புதியம்புத்தூா் நயினாா்புரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த கொம்பையா மகன் முருகன் என்ற யமஹா முருகன் (47) என்பவரைப் பிடித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவா்கள் முருகனை கைது செய்து, 2 பைக்குகள், ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்தனா்.
முருகன், ராஜீவ் நகா் 6ஆவது தெருவில் வசித்துவருவதாகவும், அவா் மீது தாளமுத்துநகா், சாத்தூா், புதியம்புத்தூா், புதுக்கோட்டை, சிப்காட், உவரி, சீவலப்பேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கஞ்சா, வெடிகுண்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.