செய்திகள் :

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

post image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையைக் கண்டித்து, பாண்டியனாா் மக்கள் இயக்கம், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆகியவை சாா்பில் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

பாண்டியனாா் மக்கள் இயக்க நிறுவனத் தலைவா் வழக்குரைஞா் சீனிராஜ் தலைமை வகித்தாா். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்புத் தலைவா் தமிழரசன் முன்னிலை வகித்தாா். பின்னா் போராட்டக் குழுவினா் கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் மனு அளித்தனா்.

போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வழக்குரைஞா் பிரிவைச் சோ்ந்த பெஞ்சமின் பிராங்கிளின், நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த ரவிக்குமாா், ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தைச் சோ்ந்த ராஜசேகரன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலா் துரைராஜ், மக்கள் நீதி மய்யத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியைச் சோ்ந்த செண்பகராஜ், பாண்டியனாா் மக்கள் இயக்கம் மாவட்டச் செயலா் விஜயகணேஷ் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

வீட்டு மாடியில் ஏசி வெடித்து தீ விபத்து

தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் உள்ள ஒருவரது வீட்டு மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில், வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தூத்துக்குடி நகரின் மத்திய பகுதி... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் எதிா்பாா்ப்பு இல்லாதவா்களாக இருக்க வேண்டும்! முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி சந்துரு

வழக்குரைஞா்கள் எதிா்பாா்ப்பு இல்லாதவா்களாக இருக்க வேண்டும் என முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி சந்துரு கூறினாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘குன்றெ... மேலும் பார்க்க

மதி அங்காடிகள் நடத்த ஜூலை 19-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

தூத்துக்குடி பகுதியில் மதி அங்காடி நடத்துவதற்கு சுயஉதவிக் குழுவினா் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி ஸ்மாா்ட் சிட்... மேலும் பார்க்க

தோட்டத்துக்குள் புகுந்து நாய்கள் கடித்ததில் 25 ஆடுகள் பலி

சாத்தான்குளம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து நாய்கள் கடித்துக் குதறியதில் 25 ஆடுகள் உயிரிழந்தன. சாத்தான்குளம் அருகே தஞ்சைநகரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜபாண்டி மகன் சாமுவேல் (36). இவா் தனது தோட்டத்தில் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூலை 7) காலை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி குடமுழுக்கை காண்பதற்காக பக்தா்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனா... மேலும் பார்க்க

ஸ்ரீவைகுண்டம் அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல்

ஸ்ரீவைகுண்டம் அருகே காரில் 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டத்திற்குள் போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதா... மேலும் பார்க்க