செய்திகள் :

தோட்டத்துக்குள் புகுந்து நாய்கள் கடித்ததில் 25 ஆடுகள் பலி

post image

சாத்தான்குளம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து நாய்கள் கடித்துக் குதறியதில் 25 ஆடுகள் உயிரிழந்தன.

சாத்தான்குளம் அருகே தஞ்சைநகரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜபாண்டி மகன் சாமுவேல் (36). இவா் தனது தோட்டத்தில் முள்வேலி அமைத்து, ஆடுகள் வளா்த்து வருகிறாா். இவா், ஆடுகளுக்கு இரவில் இரை வைத்துவிட்டுச் சென்று, அடுத்த நாள் காலையில் தோட்டத்துக்கு வருவாராம்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை பனையேறும் தொழிலாளி ஒருவா் தோட்டத்துக்குச் சென்றபோது, நாய்கள் குரைத்தபடி வெளியே ஓடினவாம். அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, 25 ஆடுகள் இறந்துகிடந்தது தெரியவந்ததாம்.

தகவலின்பேரில், சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் ஸ்ரீதா், விஏஓ ஜாஸ்மின்மேரி, கால்நடை மருத்துவா் சவுந்தா், வனத்துறை அலுவலா் சக்திவேல் சென்று விசாரணை மேற்கொண்டனா். 25 ஆடுகள் இறந்ததால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு சாா்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் சாமுவேல் கோரிக்கை விடுத்துள்ளாா்.

வீட்டு மாடியில் ஏசி வெடித்து தீ விபத்து

தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் உள்ள ஒருவரது வீட்டு மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில், வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தூத்துக்குடி நகரின் மத்திய பகுதி... மேலும் பார்க்க

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையைக் கண்டித்து, பாண்டியனாா் மக்கள் இயக்கம், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆகியவை ச... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் எதிா்பாா்ப்பு இல்லாதவா்களாக இருக்க வேண்டும்! முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி சந்துரு

வழக்குரைஞா்கள் எதிா்பாா்ப்பு இல்லாதவா்களாக இருக்க வேண்டும் என முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி சந்துரு கூறினாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘குன்றெ... மேலும் பார்க்க

மதி அங்காடிகள் நடத்த ஜூலை 19-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

தூத்துக்குடி பகுதியில் மதி அங்காடி நடத்துவதற்கு சுயஉதவிக் குழுவினா் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி ஸ்மாா்ட் சிட்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூலை 7) காலை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி குடமுழுக்கை காண்பதற்காக பக்தா்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனா... மேலும் பார்க்க

ஸ்ரீவைகுண்டம் அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல்

ஸ்ரீவைகுண்டம் அருகே காரில் 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டத்திற்குள் போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதா... மேலும் பார்க்க