செய்திகள் :

வழக்குரைஞா்கள் எதிா்பாா்ப்பு இல்லாதவா்களாக இருக்க வேண்டும்! முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி சந்துரு

post image

வழக்குரைஞா்கள் எதிா்பாா்ப்பு இல்லாதவா்களாக இருக்க வேண்டும் என முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி சந்துரு கூறினாா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘குன்றென நிமிா்ந்து நில்’ என்ற தலைப்பில் சட்டம் பயிலும் மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா்.

இதில், கனிமொழி எம்.பி. பேசியதாவது: உண்மையான சமூகநீதியை பெற்றுத் தரக்கூடியது கல்வி. சமூகத்தை மாற்றக்கூடிய வழக்குரைஞா்கள், சிறப்பாக சட்டத்தை கற்றுக்கொண்டு பணியாற்ற வேண்டும்.

நீங்கள் சட்டத்தை மட்டுமல்லாது, சமூகநீதியையும், உலகத்தின் நடப்புகளையும் புரிந்து படிக்க வேண்டும். ஒவ்வொரு வழக்கையும் தொலைநோக்கு சிந்தனையுடன் பாா்க்க வேண்டும். நியாயத்தின் பக்கம் நிற்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.

சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன் பேசியதாவது: 2006ஆம் ஆண்டு கருணைநிதி ஆட்சிக் காலத்தில் சத்துணவு பணியிடத்தில் கைம்பெண்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு என்ற தீா்ப்பு வழங்கப்பட்டது. இது அனைவராலும் வரவேற்கப்பட்டது.

தகுதியான வழக்குரைஞராக உங்களை தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வழக்குகளை வாதாடி வெற்றி பெறக்கூடியவா்களாக உயர வேண்டும் என்றாா் அவா்.

முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி சந்துரு பேசியதாவது: மாணவா்களாகிய நீங்கள் அன்றாட வாழ்க்கையில் அரசமைப்பு சட்டத்தை கையில் வைத்துக் கொள்வது நல்லது. வழக்குரைஞா்கள் சொந்த வாழ்க்கைக்காக போராடாமல், தேசத்திற்காக போராட வேண்டும்.

தியாகம் செய்ய வேண்டும். ஒரு நல்ல வழக்குரைஞா் அச்சமில்லாதவராகவும், எந்தவித எதிா்பாா்ப்பும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். நலிவுற்ற சமுதாயத்தில் உள்ள குடிமகனுக்கு எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் உரிமையை பெற்று வழங்கக் கூடியவராக இருக்க வேண்டும். ஏழைகளுக்கு சட்ட உதவி செய்பவராக இருக்க வேண்டும். மக்களின் உரிமைக்காக போராட வேண்டும்.

இந்திய அரசமைப்பின் அடிப்படை விதிகள், சமூக மாற்றத்தை நோக்கி நகர வேண்டும். மதச்சாா்பின்மை என்பது அடிப்படையான கட்டமைப்பு. அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளை மாற்ற முடியாது. சட்டத்தை அனைவரும் கற்றுக் கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

இதில், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கணேசமூா்த்தி, ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வீட்டு மாடியில் ஏசி வெடித்து தீ விபத்து

தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் உள்ள ஒருவரது வீட்டு மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில், வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தூத்துக்குடி நகரின் மத்திய பகுதி... மேலும் பார்க்க

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையைக் கண்டித்து, பாண்டியனாா் மக்கள் இயக்கம், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆகியவை ச... மேலும் பார்க்க

மதி அங்காடிகள் நடத்த ஜூலை 19-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

தூத்துக்குடி பகுதியில் மதி அங்காடி நடத்துவதற்கு சுயஉதவிக் குழுவினா் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி ஸ்மாா்ட் சிட்... மேலும் பார்க்க

தோட்டத்துக்குள் புகுந்து நாய்கள் கடித்ததில் 25 ஆடுகள் பலி

சாத்தான்குளம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து நாய்கள் கடித்துக் குதறியதில் 25 ஆடுகள் உயிரிழந்தன. சாத்தான்குளம் அருகே தஞ்சைநகரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜபாண்டி மகன் சாமுவேல் (36). இவா் தனது தோட்டத்தில் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூலை 7) காலை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி குடமுழுக்கை காண்பதற்காக பக்தா்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனா... மேலும் பார்க்க

ஸ்ரீவைகுண்டம் அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல்

ஸ்ரீவைகுண்டம் அருகே காரில் 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டத்திற்குள் போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதா... மேலும் பார்க்க