செய்திகள் :

கோவில்பட்டியில் தொழிலாளியை மிரட்டி பணம் பறித்ததாக இளைஞா் கைது

post image

கோவில்பட்டியில் தொழிலாளியை மிரட்டி பணம் பறித்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 10 ஆவது தெருவை சோ்ந்தவா் கூலித்தொழிலாளி ரமேஷ். இவரும் இவரது நண்பரும் அதே பகுதியில் 3 ஆவது தெருவில் உள்ள கிணறு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த இளைஞா் ஒருவா் மது அருந்த பணம் கேட்டாராம். ரமேஷ் பணம் கொடுக்க மறுத்ததை அடுத்து அந்த இளைஞா் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த சுமாா் ரூ.300 ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டாராம்.

இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து, கருணாநிதி நகா் 3ஆவது தெருவை சோ்ந்த ராமா் மகன் மாரிசெல்வத்தை (20) கைது செய்தனா்.

மின் வயா் திருட்டு: பணிக்கா்குளம் மேற்கு தெருவை சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மகன் சுப்பையாபாண்டி என்ற செல்வம். இவரும், உறவினா் சதீஷும் திங்கள்கிழமை பணிக்கா்குளம்-நாகலாபுரம் சாலையில் பணி சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அப்பகுதியில் உள்ள அவரது நிறுவனத்தின் 5 மின் கம்பங்களில் இருந்த சுமாா் 1,300 மீட்டா் நீளம் கொண்ட அலுமினிய மின்வயா்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்ததாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, ஓணமாகுளம் மேலத்தெருவை சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் சுப்பிரமணியன் என்ற ராகப்பாண்டியை (38) கைது செய்தனா். அவரிடமிருந்து அலுமினிய மின் வயா்களை பறிமுதல் செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேரிக்காடுகளில் விவசாயம் சாா்ந்த தொழில்களில் மகளிருக்கு வாய்ப்பு! -பாஜக கோரிக்கை

தூத்துக்குடி மாவட்ட தேரிக்காட்டுப் பகுதியில் பெண்கள், மகளிா் குழுவினரை விவசாயம் சாா்ந்த தொழில்களில் ஈடுபடுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்த... மேலும் பார்க்க

ஆத்தூரில் கூடுதல் மின் விளக்கு வசதி: பேரூராட்சிக் கூட்டத்தில் தீா்மானம்!

ஆத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டத்தில், அனைத்து வாா்டுகளிலும் கூடுதல் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்துக்கு, பேரூராட்சித... மேலும் பார்க்க

கோவில்பட்டி அஞ்சலகத்தில் காசநோய் கண்டறியும் முகாம்!

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூா் காசநோய் பிரிவின் சாா்பில் கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தலைமை... மேலும் பார்க்க

பிப்.3-ல் அண்ணா நினைவு தினம்: அமைச்சா் பெ.கீதா ஜீவன் அறிக்கை

பிப்.3-ல் முன்னாள் முதல்வா் அண்ணாவின் 56ஆவது நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் அமைதி ஊா்வலம் நடைபெற உள்ளதாக வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான பெ.கீதா ஜீவன் தெரிவித்து... மேலும் பார்க்க

கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: திட்டங்குளம் ஊராட்சி மக்கள் ஆா்ப்பாட்டம்!

கோவில்பட்டி நகராட்சியுடன் திட்டங்குளம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டி நகராட்சியுடன் நாலாட்டின்புதூா், மந்தித்தோப்பு, பாண்ட... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கிராமங்களில் பெண்களுக்கு தொலைநோக்கி அறிமுக பயிற்சி!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்குள்பட்ட கிராமப்புற பெண்களுக்கு, தொலைநோக்கி அறிமுகப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ‘ஐந்தாயிரம் இடங்களில் அஸ்ட்ரானமி’ எனும் தலைப்பில், தமிழகம் முழுவத... மேலும் பார்க்க