செய்திகள் :

கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பை: வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை

post image

கோவை சா்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையை மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை மேற்கொண்டனா்.

கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி, புணே, பெங்களூரு, ஹைதராபாத், ஷீரடி உள்ளிட்ட நகரங்களுக்கு 31 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, சிங்கப்பூா், ஷாா்ஜா, அபுதாபிக்கும் 3 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

கோவை விமான நிலையத்தில் கடந்த சில நாள்களாக பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. விமான நிலையத்துக்குள் வரும் பயணிகளின் உடைமைகள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தின் புறப்பாடு பகுதி எதிரே புதன்கிழமை இரவு கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. இதைப் பாா்த்ததும் பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் அந்தப் பகுதியை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனா்.

பின்னா் மோப்ப நாய் உதவியுடன் பையை சோதனை செய்தனா். அத்துடன் வெடிகுண்டு நிபுணா்களையும் வரவழைத்து மெட்டல் டிடெக்டா் மூலம் பையை சோதனை செய்தனா். ஆனால், அதில் அச்சப்படும் அளவுக்கு வெடிபொருள்கள் எதுவும் இல்லை. துணிகள் மட்டுமே இருந்தன.

இதையடுத்து பயணி யாரேனும் பையைக் காணவில்லை என்று உரிய அடையாளங்களுடன் வந்தால் அந்தப் பை திருப்பிக் கொடுக்கப்படும் என்று அறிவித்து அதை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் எடுத்துச் சென்றனா்.

அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி: இந்தியன் வங்கி, விமானப் படை, வருமான வரித் துறை, கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, இந்திய விமானப் படை, வருமான வரித் துறை மற்றும் இந்திய கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. 58-... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 2-இல் கலந்தாய்வு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூன் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பிரிவில் 23 பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதில் மொத்தம் 1,72... மேலும் பார்க்க

தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பொள்ளாச்சி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தோட்டக்கலைத் துறை வெள... மேலும் பார்க்க

பிரியாணி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை சரவணம்பட்டியில் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது: கோவை சரவணம்... மேலும் பார்க்க

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்

கோவையில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மா... மேலும் பார்க்க

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாட்டுப் பணி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழு... மேலும் பார்க்க