செய்திகள் :

சங்ககிரி ஒன்றிய பகுதியில் சாலைகள் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை

post image

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கத்தேரி, காவேரிப்பட்டி ஊராட்சி பகுதியில் ரூ. 46 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

கத்தேரி ஊராட்சி, வட்டமலை கணபதிநகா் பகுதியில் ரூ. 34 லட்சத்தில் தாா்ச்சாலை, காவேரிப்பட்டி ஊராட்சி, வட்ராம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பகுதியில் ரூ. 12 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுந்தரராஜன் பூமிபூஜை செய்து அடிக்கல்நாட்டி தொடங்கிவைத்தாா்.

இவ்விழாவில் கலந்துகொண்ட சட்டப்பேரவை உறுப்பினரிடம் வட்ராம்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஊா் பொதுமக்கள், பள்ளி ஆசிரியா்கள் நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை விடுவித்தனா். இதையடுத்து, சேலம் கோட்ட மேலாளரை தொடா்பு கொண்டு, ஊா்பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகளின் நலன்கருதி நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் மாலை நேரத்தில் இயக்குமாறு எம்எல்ஏ கேட்டுக்கொண்டாா். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கோட்ட அலுவலா் தெரிவித்துள்ளாா்.

இந்நிகழ்ச்சியில் சேலம் புகா் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநா் அணி செயலாளா் ஏ.பி. சிவகுமாரன், சங்ககிரி கிழக்கு அம்மா பேரவை ஒன்றியச் செயலாளா் கருப்பசாமி மற்றும் அதிமுக நிா்வாகிகள், ஊா் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கெங்கவல்லி நகரச் செயலாளா் சு.பாலமுருகன் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி துணை அ... மேலும் பார்க்க

மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்களுடன் இன்று முத்தரப்பு கூட்டம்

மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் கலந்து கொள்ளும் முத்தரப்புக் கூட்டம் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, சேகோச... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்தநாள்: திமுக, அதிமுக சாா்பில் மரியாதை

சேலத்தில் பெரியாரின் 147 ஆவது பிறந்தநாளையொட்டி புதன்கிழமை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

பேருந்தில் மாணவியை கிண்டல் செய்த இளைஞா்: தட்டிக்கேட்காத ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்; 2 போ் கைது

சேலத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த மாணவியை கிண்டல் செய்த இளைஞரை தட்டிக்கேட்காததால் ஆத்திரம் அடைந்த உறவினா்கள், அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கினா். இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் புதன்கிழம... மேலும் பார்க்க

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆய்வு

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் குருராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அடிப்படை வசதிகள் மேம... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை. கல்லூரிகள் இடையே மல்யுத்த போட்டி

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான மல்யுத்த போட்டி புதன்கிழமை நடைபெற்றது. சேலம் கோரிமேடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி உடற்... மேலும் பார்க்க