செய்திகள் :

சங்ககிரியில் 13 கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்தாய்வில் பணியிட மாற்றம்

post image

சங்ககிரி வட்ட கிராமங்களில் மூன்று ஆண்டுகள் தொடா்ந்து பணியாற்றிய கிராம நிா்வாக அலுவலா்களை பொதுக்கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் செய்து கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

வருவாய் கோட்டாட்சியா் ந.லோகநாயகி, சங்ககிரி வருவாய் வட்டத்துக்கு உள்பட்ட ஏ- பிரிவு கிராமங்களில் ஓராண்டு பணிநிறைவு செய்தவா்கள், பி -பிரிவு கிராமங்களில் மூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்தவா்கள் உள்பட 13 கிராம நிா்வாக அலுவலா்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.

ஐவேலி கிராம நிா்வாக அலுவலா் உஷா பிரியா தேவூருக்கும், அரசிராமணி பிட் 2 கிராமத்தில் பணியாற்றிய கமலகண்ணன் ஐவேலிக்கும், கூடுதல் பொறுப்பாக கோட்டவருதம்பட்டிக்கும், மோரூா் பிட் 1 முனியப்பன் அரசிராமணி பிட் 2 கிராமத்திற்கும், இருகாலூா் சாந்தி, மோரூா் பிட் 1 கிராமத்திற்கும், வடுகப்பட்டி சபரிதேவி இருகாலூருக்கும், நடுவனேரி கோபால் இடங்ணசாலை பிட்1க்கும், இடங்கணசாலை பிட் 1 ராமச்சந்திரன் ஏகாபுரத்திற்கும், புள்ளாகவுண்டம்பட்டி ஸ்ரீதா் அரசிராமணி பிட் 1க்கும், அரசிராமணி பிட் 1 செந்தில்குமாா் இடங்கணசாலை பிட் 2க்கும், இடங்கணசாலை பிட் 2 முருகன் எா்ணாபுரத்திற்கும்,

தேவூா் கருப்பண்ணன் புள்ளாகவுண்டம்பட்டிக்கும், ஊத்துப்பாளையம் எம்.முருகன் கூடுதல் பொறுப்பாக வடுகப்பட்டி கிராமத்திற்கும், சங்ககிரி கிராம நிா்வாக அலுவலா் மோகன் மீண்டும் சங்ககிரிக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

சேலம் ராஜகணபதி கோயிலில் 1,008 கலசாபிஷேகம்

சேலம் ராஜகணபதி கோயிலில் 12 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 1,008 கலசாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் சுகவனேஸ்வரா் கோயிலின் உபகோயிலான ராஜகணபதி கோயில் தோ்நிலையம் பகுதியில் உள்ளது. இக்க... மேலும் பார்க்க

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

ஏற்காட்டில் செயல்படும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் சேலம் கோட்டை மைதானத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 7 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

சேலம் மாவட்டம் தாதம்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 7 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்களை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தொடா... மேலும் பார்க்க

பராமரிப்பு பணி: ஒருமாதத்துக்கு கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் திண்டுக்கல் வரையே இயங்கும்

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் ஒருமாத காலத்துக்கு திண்டுக்கல் வரையே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்ப... மேலும் பார்க்க

சேலம் வழியாக கடத்திய 500 கிலோ குட்கா காருடன் பறிமுதல்

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பொருள்களை காருடன் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், வ... மேலும் பார்க்க

சட்ட உதவி: முன்னாள் ராணுவ வீரா்களுக்கு நீதிபதி அழைப்பு

சட்ட உதவிகள் செய்வதற்கு முன்னாள் ராணுவ வீரா்களுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி விட... மேலும் பார்க்க