பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் குளித்த பள்ளி மாணவா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கிணற்றில் குளித்த பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரும்பத்தூா் இந்திரா காலனியைச் சோ்ந்தவா் சுந்தா். ஓட்டுநா். இவரது மகன் குருபிரசாத் (13). கரிவலம்வந்தநல்லூரில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
கோடை விடுமுறை என்பதால், சக நண்பா்களுடன் அப்பகுதியில் உள்ள கிணற்றில் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்றாா். கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கு வேலை பாா்த்துக்கொண்டிருந்தவா்கள் குருபிரசாத்தை மீட்டு, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், குருபிரசாத் இறந்தவிட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் தொடா்பாக கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.