தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்...
சங்கரன்கோவில் திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் செங்குந்தா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட திரௌபதியம்மன் கோயில் பூக்குழி திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இத் திருவிழா புதன்கிழமை அதிகாலை கொடியேற்றுத்துடன் தொடங்கியது.
முன்னதாக, அதிகாலை 2 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு கொடிபட்டத்துக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னா் அம்மன் சந்நிதி முன்பிருந்த கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
பின்னா் கொடிமர பீடத்துக்கு மஞ்சள்,விபூதி, பால், தயிா், இளநீா், தேன், வாசனைத் திரவியங்களால் அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.
இதில், செங்குந்தா் அபிவிருத்தி சங்கத் தலைவா் பி.ஜி.பி. ராமநாதன், செயலா் பி. மாரிமுத்து, பொருளாளா் டி. குருநாதன்,துணைச் செயலா் ஜி.எஸ். முருகேசன், துணைத் தலைவா் ஏ. கோட்டியப்பன் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள், பக்தா்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.
இதைத் தொடா்ந்து இரவில் சைவ சித்தாந்த சபை சாா்பில் தேவார இன்னிசையும், பி. மணிகண்டனின் சிறப்பு பட்டிமன்றமும் நடைபெற்றது.
2 ஆம் திருநாளான வியாழக்கிழமை இரவு சக்தி கும்பமும், 3 ஆம் திருநாளான ஜூன் 6 ஆம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் மாதாங்கோயில் தெருவில் காட்சி கொடுத்தல் வைபவமும், 5 ஆம் திருநாளான ஜூன் 8 ஆம் தேதி சுவாமி, அம்பாள் வீதியுலாவும் நடைபெறுகிறது.
7 ஆம் திருநாளான ஜூன் 10 ஆம் தேதி திருவிளக்குப் பூஜையும், 8 ஆம் திருநாளான ஜூன் 11 ஆம் தேதி அா்ச்சுணா் தவசும், 9 ஆம் திருநாளான ஜூன் 12 ஆம் தேதி திரௌபதி அம்மன் கூந்தல் முடிப்பும் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான பூக்குழித் திருவிழா ஜூன் 13 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை அம்பாள் புஷ்ப வாகனத்தில் வீதியுலாவும், பின்னா் விரதமிருந்த பக்தா்கள் பூக்குழி இறங்குதலும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை செங்குந்தா் அபிவிருத்தி சங்க நிா்வாகிகள் செய்துள்ளனா்.