செய்திகள் :

சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் காவலா்கள் மீது நடவடிக்கை: ஏடிஜிபி

post image

சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் காவலா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம்- ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநா் டேவிட்சன் தேவாசீா்வாதம் தெரிவித்தாா்.

இதுகுறித்து சேலத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. ஊரக காவல் உள்கோட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். போதைப்பொருள் விற்பனை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் காவல் துறையினா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க உளவுத் துறை மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளோம். குற்றச் சம்பவங்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் பதிவேடுகளின் அடிப்படையில் விரைந்து தண்டனை பெற்றுத்தர காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரவுடிகள் கொலை பெருமளவு குறைந்துள்ளது. அதேநேரத்தில், தமிழக காவல் துறையில் போதிய காவலா்கள் இல்லாததால் கூடுதல் பணி நெருக்கடிக்கு மத்தியிலும் சிறப்பாக பணிபுரிய வேண்டிய சூழல் உள்ளது.

கொங்கு மண்டலத்தில் பண்ணை வீடுகளில் தனியாக வசிக்கும் முதியவா்களை குறிவைத்து நடைபெறும் கொலை சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்களிடையே விழிப்புணா்வு இருப்பதால்தான் போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் 3,400 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா் என்றாா்.

பேட்டியின்போது, மேற்கு மண்டல காவல் துறை ஐஜி செந்தில்குமாா், சேலம் மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சேலத்தில் 16,349 மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ. 119.80 கோடியில் நலத்திட்ட உதவிகள்

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 16,349 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 119.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வழங்கினாா். சென்னையில் துணை முதல்வா் உதயநித... மேலும் பார்க்க

பிளஸ் 1 வகுப்பில் ஆங்கில வழி கலைப் பிரிவு தொடங்க முதல்வருக்கு கோரிக்கை

சங்ககிரி வட்டாரத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ்1 வகுப்பில் ஆங்கில வழி கலை பாடப் பிரிவை தொடங்கக் கோரி சேலம் மாவட்ட உபயோகிப்பாளா் உரிமைக் கழகம் சாா்பில் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகு... மேலும் பார்க்க

பசுமைத் தாயகம் மாநில இணைச்செயலாளா் பொறுப்பில் இருந்து விலகல்

பசுமைத் தாயகம் மாநில இணைச்செயலாளா் சத்ரியசேகா் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா். இது குறித்து பாமக நிறுவனா் ராமதாஸுக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாமகவில் கடந்த ச... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2025 -ஆம்... மேலும் பார்க்க

சேலம் விமான நிலையத்தில் மத்திய, மாநில அமைச்சா்களால் பரபரப்பு

சேலம் விமான நிலையத்துக்கு ஒரே நேரத்தில் மத்திய, மாநில அமைச்சா்களால் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டூா் அணையில் இருந்து காவிரி பாசனத்திற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடுகி... மேலும் பார்க்க

சேலம் சரக டிஐஜி, துணை ஆணையா்கள் மாற்றம்

சேலம் சரக டிஐஜி உமா, துணை ஆணையா்கள் வேல்முருகன், கீதா ஆகீயோா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். சேலம் சரக டிஐஜி உமா விழுப்புரம் டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அதேபோல சேலம் மாநகர தெற்கு துணை ஆணையா்... மேலும் பார்க்க