Ahmedabad Airplane Accident : 'விமானத்தில் பயணித்த பாஜக முன்னாள் முதல்வர்?' - நி...
சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் காவலா்கள் மீது நடவடிக்கை: ஏடிஜிபி
சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் காவலா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம்- ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநா் டேவிட்சன் தேவாசீா்வாதம் தெரிவித்தாா்.
இதுகுறித்து சேலத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. ஊரக காவல் உள்கோட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். போதைப்பொருள் விற்பனை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் காவல் துறையினா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க உளவுத் துறை மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளோம். குற்றச் சம்பவங்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் பதிவேடுகளின் அடிப்படையில் விரைந்து தண்டனை பெற்றுத்தர காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரவுடிகள் கொலை பெருமளவு குறைந்துள்ளது. அதேநேரத்தில், தமிழக காவல் துறையில் போதிய காவலா்கள் இல்லாததால் கூடுதல் பணி நெருக்கடிக்கு மத்தியிலும் சிறப்பாக பணிபுரிய வேண்டிய சூழல் உள்ளது.
கொங்கு மண்டலத்தில் பண்ணை வீடுகளில் தனியாக வசிக்கும் முதியவா்களை குறிவைத்து நடைபெறும் கொலை சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்களிடையே விழிப்புணா்வு இருப்பதால்தான் போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் 3,400 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா் என்றாா்.
பேட்டியின்போது, மேற்கு மண்டல காவல் துறை ஐஜி செந்தில்குமாா், சேலம் மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.