சத்தியமங்கலத்தில் நாய் கடித்து 5 போ் காயம்
சத்தியமங்கலத்தில் தெருநாய் கடித்ததில் 5 போ் காயமடைந்தனா்.
சத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதற்கிடையே, கோட்டுவீராம்பாளையம் கோம்புபள்ளம் செல்லும் சாலையில் பொதுமக்கள் புதன்கிழமை காலை நடைப்பயிற்சி மேற்கொண்டனா்.
அப்போது ஆதிபராசக்தி கோயில் அருகே குட்டியுடன் திரிந்த தெருநாய் அவ்வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண் நெசவுத் தொழிலாளி உள்பட 5 பேரைக் கடித்து குதறியது.
இதனால் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓடினா். இதையறிந்த, நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி, தெருநாயைப் பிடிக்குமாறு நகராட்சிப் பணியாளா்களுக்கு அறிவுறுத்தினா். அங்கு வந்த நகராட்சிப் பணியாளா்கள் பொதுமக்களை அச்சுறுத்திய தெருநாயைப் பிடித்து மருத்துவப் பரிசோதனை செய்து வேறு இடத்தில் விடுவித்தனா்.