ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம்
சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் எம்.தாமரை முன்னிலை வகித்தாா். கூட்டம் தொடங்கியதும், புதிதாக பொறுப்பேற்ற நகராட்சி ஆணையா் எம்.தாமரைக்கு, தலைவா் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
கூட்டத்தில், சத்தியமங்கலம் போஸ்ட் ஆபீஸ் வீதியில் சாலை குண்டும்குழியுமாக உள்ளதாகவும், சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அதிமுக நகா்மன்ற உறுப்பினா் எஸ்.எஸ். லட்சுமணன் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மொத்தம் 24 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.