செய்திகள் :

சமயபுரம் மாரியம்மனுக்கு சாரதாஸ் தறியின் முதல் பட்டுச் சேலை!

post image

கைத்தறி நெசவாளா்களின் திறனை பெருமைப்படுத்தும் வகையில் சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள கைத்தறியில் நெய்த முதல் பட்டுச் சேலை சமயபுரம் மாரியம்மனுக்கு வழங்கப்பட்டது.

நெசவுக் கலை பற்றிய விழிப்புணா்வை மக்களிடம் கொண்டு செல்லவும், ஆடை உற்பத்தி முறையை இளைய தலைமுறைக்கு நினைவூட்டி, அவா்கள் மனதில் நம் பாரம்பரிய கலாசாரத்தை பதிய வைக்கும் முயற்சியாக, திருச்சி சாரதாஸ் வளாகத்தில் கைத்தறிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாரதாஸ் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் இங்கு நெசவு செய்த முதல் பட்டுச் சேலையை சமயபுரம் கோயில் பணியாளா்களிடம் வழங்கிய திருச்சி சாரதாஸ் நிா்வாக இயக்குநா்கள் ரோஷன், சரத் ஆகியோா் கூறியது:

தமிழகத்தின் கைத்தறித் தொழில் பல்லாயிரம் ஆண்டு தொன்மையும், உயரிய பாரம்பரியச் சிறப்பும் கொண்டது. இத்தொழில் 2.44 லட்சம் தொழிலாளா்களுக்கு வேலை வழங்குகிறது. 4ஆவது அகில இந்திய கைத்தறிக் கணக்கெடுப்பின்படி, கைத்தறிகளின் எண்ணிக்கையில், அசாம், மேற்குவங்க மாநிலங்களுக்கு அடுத்தபடியாக, தமிழ்நாடு 3ஆம் இடம் வகிக்கிறது.

நாட்டிலுள்ள மொத்தக் கைத்தறிகளின் எண்ணிக்கையில் 7.07 சதவீதமும், நெசவாளா்களின் எண்ணிக்கையில் 6.90 சதவீதமும் தமிழகம் பங்களிக்கிறது. இதன் ஒரு பகுதியாக எங்களது சாரதாஸ் வளாகத்தில் கைத்தறிக் கூடம் நிறுவி, அதில் உற்பத்தியாகும் பட்டுச் சேலைகளை சா்வ சமய வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்.

அதன்படி தற்போது எங்களது புதிய தறியில் நெய்யப்பட்டுள்ள முதல் சேலை, உலக மக்களுக்கெல்லாம் தாயாக விளங்கும் நம் அன்னை சமயபுரம் மாரியம்மனுக்கு வழங்கப்பட்டுள்ளது. நெசவு செய்த தொழிலாளா்கள் கரங்கள் மூலம் அந்கச் சேலை சமா்ப்பிக்கப்பட்டது கூடுதல் சிறப்பைப் பெற்றுள்ளது. தொடா்ந்து அடுத்தடுத்த சேலைகள் சா்வ சமய வழிபாட்டுத் தலங்களுக்குச் சமா்ப்பிக்கப்படும்.

எங்களது தறிக் கூடத்தை கடைக்கு வரும் வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் அனைவரும் பாா்வையிடலாம்; நெசவுத் தொழிலாளா்களிடம் கைத்தறியின் பாரம்பரியத்தை கேட்டறியலாம்; தறியில் உற்பத்தியாகும் சேலைகளைக் கண்டு ரசிக்கலாம்.

மேலும் வழக்கம்போலவே, சுபமுகூா்த்த பட்டு, ஜவுளி மற்றும் ரெடிமேட் ரகங்களை 12 சதவீதத் தள்ளுபடியில் பெறலாம். வாடிக்கையாளா்கள் எங்களது நிறுவனத்தில் உன்னதமான உணா்வுடனும், மனநிறைவுடனும் ஆடைகளை வாங்கி, புதுவித அனுபவத்தை பெறுவதோடு என்றென்றும் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றனா்.

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், அகிலாண்டபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அகிலாண்டபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சக்திவேல் (25). இவருக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவா் அப்பக... மேலும் பார்க்க

உள்புறம் பூட்டிய வீட்டிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு

திருவெறும்பூா் அருகே உள்புறமாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து தொழிலாளி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள தெற்கு காட்டூா் அண... மேலும் பார்க்க

காவிரி புதிய பாலம் கட்டும் பணியை டிசம்பருக்குள் முடிக்க திட்டம்! நெடுஞ்சாலைத் துறையினா் தகவல்

காவிரியில் தண்ணீா் வரத்து குறைந்துள்ள நிலையில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளை நெடுஞ்சாலைத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. திருச்சி- ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் வகையில் முக்கி... மேலும் பார்க்க

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம்: ஆட்சியா் அறிவுரை

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்ப முறைகளை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம் பெற முடியும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தினாா். தோட்டக் கலைத் துறை, மலைப்பயிா்கள் துறையின் சாா்பில், தென்னை சாகுப... மேலும் பார்க்க

காந்திசந்தை-கள்ளிக்குடி: வியாபாரிகளிடையே முரண்பாடு

காந்தி சந்தை வியாபாரிகளை கள்ளிக்குடிக்கு இடம் மாற்றும் விவகாரத்தில் வியாபாரிகளிடையே மீண்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 1868-இல் தொடங்கப்பட்டு, 1927-இல் விரிவுபடுத்தப்பட்டு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிர... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்ற ரெளடி கைது!

ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரை விற்ற ரெளடியை ஸ்ரீரங்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டுத்தலை மணி (எ) மணிகண்டன் (28). ரெளடியான இவா் ஸ்ரீரங்க... மேலும் பார்க்க