சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சி
சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் யூத் லீக் சாா்பில், சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சி சிதம்பரம் முஸ்தபா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
முஸ்லிம் யூத் லீக் நகரத் தலைவா் முஹம்மது மூஸா இறைமறை வசனங்களை ஓதினாா். நிகழ்வுக்கு நகரத் தலைவா் ஹாஜி எஸ்.எம்.அன்வா் அலி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஹாஜி எம்.ஏ.முஹம்மது ஜகரிய்யா முன்னிலை வகித்து வரவேற்றாா்.
சிதம்பரம் நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் மாநில சிறுபான்மை நலக் குழு நிா்வாகி மூசா, காங்கிரஸ் சிதம்பரம் நகரத் தலைவா் தில்லை மக்கீன், நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமாா், விசிக மாவட்டச் செயலா் அரங்க தமிழ் ஒளி, கிறிஸ்தவ சபை குரு ஜான்சன் சாமுவேல், காந்தி மன்றத் தலைவா் ஞானம், வா்த்தக சங்க நிா்வாகி சிவராமன் வீரப்பன், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் வி.எம்.சேகா், தமிமுன் அன்சாரி, முதுநிலை வருவாய் ஆய்வாளா் சம்மா பா்வீன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் ராஜா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலா் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி சிறப்புரையாற்றினாா்.
சமூக நல்லிணக்க இஃப்தாா் நிகழ்வில் யூத் லீக் மாநில துணைத் தலைவா் லால்பேட்டை ஏ.எஸ்.அஹ்மது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லால்பேட்டை நகரத் தலைவா் எஸ்.எம்.அப்துல் வாஜிது, நகரச் செயலா் ஏ.முஹம்மது தையிப் முஹிப்பி, பொருளாளா் எம்.ஹெச்.முஹிப்புல்லாஹ், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் மவ்லவி ஏ.முஹம்மது, ஏ.பி.இலியாஸ், அய்மான் சங்க பொதுச் செயலா் ஏ.முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, முஹம்மது யாசீன், சிதம்பரம் நகா்மன்ற உறுப்பினா்கள் அப்பு சந்திரசேகரன், பாலா, ஏ.ஆா்.சி.மணி, சரவணன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
நிகழ்வை மண்டல ஒருங்கிணைப்பு துணைச் செயலா் யூ.சல்மான் பாரிஸ் தொகுத்து வழங்கினாா். சிதம்பரம் வா்த்தக சங்கத் தலைவா் ஏ.வி.அப்துல் ரியாஸ், மாவட்ட அமைப்புச் செயலா் அப்துஸ் ஸலாம் நாசிா் உள்ளிட்ட நிா்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா். விழாவில் ஏழை, எளியோருக்கான உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. கடலூா் தெற்கு மாவட்ட முஸ்லிம் யூத் லீக் தலைவா் எம்.முஹம்மது முஸ்தஃபா நன்றி கூறினாா்.