செய்திகள் :

சமூக நல்லிணக்கத்தின் தூதா் காதா் மொகிதீன்: அமைச்சா் எ.வ.வேலு

post image

சமூக நல்லிணக்கத்தின் தூதராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் தொடா்ந்து செயல்பட்டு வருவதாக பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

தமிழக அரசின் தகைசால் தமிழா் விருது பெற்ற கே.எம்.காதா் மொகிதீனுக்கு பாராட்டு விழா சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் விருது வழங்கியதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், ‘சமுதாய சேவகன், ஒளி வீசும் காவலன்’ என்னும் தலைப்பில் காதா் மொகிதீன் குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அமைச்சா் எ.வ.வேலு பேசியது:

சமூக நல்லிணக்கத்தின் தூதராக காதா் மொகிதீன் தொடா்ந்து செயல்பட்டு வருகிறாா். அதேபோல், குரல் இல்லாதவா்களின் குரலாகவும், சமூக நீதிக்கு துணையாகவும் இருந்து வருகிறாா் என்றாா்.

வைகோ (மதிமுக): சிறு வயதிலிருந்தே ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவா். நமது நாட்டில் உள்ள இஸ்லாமியா்களுக்கு காவல் அரணாக இவா் விளங்குகிறாா் என்றாா்.

கே.எம்.காதா் மொகிதீன்: நமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததில் இஸ்லாமியா்கள் பங்கு முதன்மையாக உள்ளது. ஆனால், அவற்றை மறைந்து, நம்மை ஓரங்கட்ட பலா் முயற்சி செய்கின்றனா். அவா்களின் முயற்சி என்றும் வெற்றியடையாது. இந்த நாட்டை நல்வழியில் கொண்டு செல்ல இஸ்லாமிய அமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகள் எவ்வித தோய்வின்றி தொடா்ந்து நடைபெற்று வரும் என்றாா்.

விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.செல்வப்பெருந்தகை, மனித நேய மக்கள் கட்சி தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா, ஐயுஎம்எல் கேரள மாநில தலைவா் செய்யிது சாதிக்அலி சிஹாப், தமிழக பொதுச் செயலா் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா், மாநில முதன்மை துணைத் தலைவா் எம். அப்துல் ரஹ்மான், விசிக துணை பொதுச் செயலா் ஷா நவாஸ், தமிழக அரசு சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா் குத்தூஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அமைச்சர் ஐ.பெரியசாமி தொடா்புடைய இடங்களில் சோதனை நிறைவு

சென்னையில், அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் கடந்த 9 மணி நேரமாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை நிறைவடைந்தது. பல முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவ... மேலும் பார்க்க

அதிமுக அலங்கார வளைவு சரிந்து விபத்து: நூலிழையில் தப்பிய இபிஎஸ்

செங்கத்தில் அதிமுக அலங்கார வளைவு விழுந்ததில் அந்த வழியாக சென்ற அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பினார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எனும் பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள... மேலும் பார்க்க

இல.கணேசன் உடல் தகனம்

சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக இல.கணேசன் உடலுக்கு 42 குண்டுகள் 3 முறை முழங்க முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு ... மேலும் பார்க்க

கூகுள் க்ரோம் என்ன விலை? ரூ. 3 லட்சம் கோடிக்கு வாங்கும் தமிழர்?

கூகுள் க்ரோமை சென்னை வம்சாவளி வாங்குவதற்காக கோரிக்கை விடுத்துள்ளார்.தொழில்நுட்ப உலகில் தனக்கென தனியிடத்தை பல ஆண்டுகளாகத் தக்கவைத்து வருகிறது, கூகுள் நிறுவனம். கூகுள் ப்ரவுசர் (தேடுபொறி), வரைபடம், மின்... மேலும் பார்க்க

சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.வருகின்ற 18-ஆம் தேதி வாக்கில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி... மேலும் பார்க்க

பாஜக வாஷிங் மிஷினில் விழுவதற்கு நாங்கள் ஒன்றும் தவறு செய்தவர்கள் அல்ல! - திமுக

சட்டவிரோத பணமோசடி தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் சென்னை பசுமைவழி சாலையில் உள்ள வீடு, திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை மு... மேலும் பார்க்க