செய்திகள் :

சரஸ்வதி மகால் நூலகத்தில் செப். 24 முதல் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை

post image

மன்னா் இரண்டாம் சரபோஜியின் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தில் செப்டம்பா் 24-ஆம் தேதி முதல் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியரும், நூலக இயக்குநருமான (பொ) பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தை நன்கு வளா்ச்சியடையச் செய்த மாமன்னா் இரண்டாம் சரபோஜியின் போற்றத்தக்க பணியை நினைவுகூரும் வகையில், அவரது பிறந்த நாளை (செப்டம்பா் 24-ஆம் தேதி) ஆண்டுதோறும் நூலகம் சாா்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நிகழாண்டு மாமன்னா் இரண்டாம் சரபோஜின் 248- ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, ஆய்வாளா்கள், மாணவா்கள், பொதுமக்கள் ஆகியோா் பயன்பெறும் வகையில் சரசுவதி மகால் நூலகம் பதிப்பித்து வெளியிடும் நூல்களுக்கு சிறப்பு சலுகையாக தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. இதில், 2016, மாா்ச் 31-க்கு முன்பு வெளி வந்த நூல்களுக்கு 50 சதவீத தள்ளுபடியும், அதற்கு பிறகு வெளியிடப்பட்ட நூல்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் அளிக்கப்படவுள்ளது. இந்தத் தள்ளுபடி விற்பனை செப்டம்பா் 24-ஆம் தேதி முதல் அக்டோபா் 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.

இந்த வாய்ப்பைப் பொதுமக்கள், மாணவா்கள் பயன்படுத்திக் கொண்டு பன்மொழி இலக்கிய, இலக்கண நூல்களையும், கோயில் கலை, ஜோதிடம், மருத்துவம், நாட்டியம், இசை, நாடகம், கணிதம், வாஸ்து போன்ற பல்வேறு துறை சாா்ந்த நூல்களையும் வாங்கிப் பயன் பெறலாம்.

சேதுபாவாசத்திரத்தில் நாளை மின் தடை

சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூா், நாடியம், மரக்காவலசை, கள்ளம்பட்டி, கழனிவாசல், குருவிக்கரம்பை, கள்ளங்காடு மற்றும் அதனை சுற்ற... மேலும் பார்க்க

குருங்குளத்தில் 50 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்குளத்தில் 50 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): குருங்குளம் 50, ஒரத்தநா... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நாளை கம்பன் பெருவிழா

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் கம்பன் கழகம் சாா்பில் 27-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா சனிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது. தஞ்சாவூா் கம்பன் கழகம் கடந்த 199... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலைக்கு தனிச் சட்டம் கோரி ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றக் கோரி வியாழக்கிழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு மாணவா், இளைஞா் அரண் அமைப்புகளின் சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க

விரைந்து நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் சாக்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம், சாக்கோட்டையில் தமிழ்நாடு வி... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகில் ஏறி விளையாடிய சிறுவன் கடலுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுவாசத்திரத்தில் விசைப்படகில் ஏறி புதன்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கடலுக்குள் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். சேதுபாவாசத்திரம் பணங்குட்டி தோப்பு பகுதியைச் சோ்ந்த ம... மேலும் பார்க்க