செய்திகள் :

`சவாலுக்குத் தயாரா?' - நீட் தேர்வு விவகாரம், எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்ட முதல்வர் ஸ்டாலின்

post image

ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா, அரசின் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் தலைமையேற்று தொடங்கி வைத்தார். நீட் விவகாரம் குறித்து மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், " முன்னாள் முதல்வர்கள் தலைவர் கலைஞர், அம்மையார் ஜெயலலிதா ஆகியோர் இருந்தவரை தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வு நுழையவில்லை. அவர்களின் மறைவுக்குப் பிறகு தான் நீட் தேர்வை இங்கு நுழையவிட்டார்கள்.

முதல்வர் ஸ்டாலின்

பா‌.ஜ.க - வின் பாதம் தாங்கியாக இருந்து வரும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.‌ பன்னீர்செல்வம் ஆகியோர் தான் நீட் தேர்வைக் கொண்டு வந்தவர்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் மீது அக்கறை இருப்பது போல நடித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. பா.ஜ.க - வுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டி வரும் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்தால் தான் பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இணையும் என்ற நிபந்தனையை முன்வைக்க முடியுமா ? எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்டு சொல்கிறேன். நிச்சயம் இதை செய்ய மாட்டார். ஏனென்றால் அவருக்கு தமிழ்நாட்டின் நலன் முக்கியமில்லை " என்றார்.

Congress : `அன்று’ விழுத் தொடங்கிய காங்கிரஸ் இன்னும் எழ முடியாமல் திணறுவது ஏன்? - விரிவான அலசல்!

`முன்னொரு காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் என்ற ஒரு கட்சி இருந்ததாகவும், அதைப் பல முக்கிய அரசியல் தலைவர்கள் வழிநடத்தியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறோம்' என மக்கள் பே... மேலும் பார்க்க

இபிஎஸ் OUT; செங்கோட்டையன் IN; `காலில் விழுந்த EPS' - `பொம்மை முதல்வர்' - சட்டசபையில் நடந்தது என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஏப்ரல் 7) கூடியது. அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் குறித்து கவன ஈர்ப்பு நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச எழுந்ததும், சட்டப்பேரவை நேரலை ஒளிபரப... மேலும் பார்க்க

`அந்த தியாகி யார்?' - சட்டப்பேரவைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்; காரணம் என்ன?

தமிழக அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை கடந்த மாதம் 14-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 15-ம் தேதி வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் ... மேலும் பார்க்க

ஒரு சென்ட் நிலம்கூட கிடையாது; கட்சி கட்டடமே வசிப்பிடம் - சிபிஎம் தேசிய பொதுச் செயலாளரான எம்.ஏ.பேபி!

மதுரையில் நடந்த சி.பி.எம் அகில இந்திய மாநாட்டில் புதிய தேசிய செயலாளராக கேரளாவைச் சேர்ந்த எம்.ஏ.பேபி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு-க்கு அடுத்தபடியாக கேரளாவில் இருந்து... மேலும் பார்க்க

அட்டைப்படம்

அட்டைப்படம் - விகடன் ப்ளஸ் மேலும் பார்க்க