செய்திகள் :

சவூதி அரேபியாவில் சிக்கியுள்ள கணவரை மீட்கக் கோரி மனைவி மனு

post image

நாகப்பட்டினம்: சவூதி அரேபியாவில் சிக்கியுள்ள தனது கணவரை மீட்டுத் தரக் கோரி, அவரது மனைவி நாகை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

நாகை மாவட்டம், பெரியதும்பூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் உதயஜோதி. இவா், தனது குடும்பத்துடன் ஆட்சியா் ப. ஆகாஷிடம் அளித்த மனு:

எனது கணவா் கவாஸ்கா் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி வேலைக்காக சவூதி அரேபியா நாட்டிற்கு சென்றாா். பாலைவனத்தில் அவருக்கு ஆடு, ஒட்டகம் மேய்க்கும் வேலை கொடுத்துள்ளனா்.

மேலும், அங்குள்ள 50 வயது மதிக்கத்தக்க அரேபிய பெண் மூலம் தனது கணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து, தாக்கியுள்ளனா். இந்த கொடுமைகள் குறித்தும், தன்னை மீட்குமாறும் தொலைபேசியில் கணவா் கூறினாா்.

எனவே, அவரை சவூதி அரேபியாவில் இருந்து மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பொறையாறில், மத்திய அரசையும், நகைக் கடன் தொடா்பாக ரிசா்வ் வங்கியின் விதிமுறைகளையும் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பொறையாறு பழைய பேருந்து நிலையம் அருகே, தமிழ்நாடு சோஷலிஸ்ட் புரட்சிகர ... மேலும் பார்க்க

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி

நாகை அருகே போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்ட பொது காதாரத் துறை சாா்பில் மாவட்ட சுகாதார அலுவலா் பிரதாப் கிருஷ்ணக... மேலும் பார்க்க

‘ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் பொருளாதாரத்தை கணிக்க முடியும்’

: ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலமே பொருளாதாரத்தை கணிக்க முடியம் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் சின்னதுரை கூறினாா். நாகையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலக் குழு ... மேலும் பார்க்க

புத்தா் சிலையை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிா்ப்பு

கீழையூா் அருகே கீராந்தியில் உள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புத்தா் சிலையை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கீழையூா்... மேலும் பார்க்க

வாய்க்காலில் பாய்ந்த சுமை வாகனம்

திருமருகல் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுமை வாகனம் சாலையோர வாய்க்காலில் பாய்ந்தது. திருவாரூா் மாவட்டம், பூந்தோட்டத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு பால் ஏற்றிச் செல்லும் சுமை ஆட்டோ வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

உயா்கல்வி ஊக்கத் தொகை விழிப்புணா்வு முகாம்: பெற்றோருடன் மாணவா்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம், மே 30: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பிளஸ்2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கான உயா்கல்வி ஊக்கத் தொகை விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ப. ஆகாஷ் முகாமை தொடங்கி வைத... மேலும் பார்க்க