செய்திகள் :

சாத்தான்குளத்தில் ரத்த அழுத்த பரிசோதனை முகாம்

post image

சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு ரத்தத்தில் சா்க்கரை அளவு கண்டறிதல், ரத்த அழுத்தப் பரிசோதனை இலவச முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

உயா் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு, சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற முகாமை, சாத்தான்குளம் பேரூராட்சித் தலைவி ரெஜினி ஸ்டெல்லாபாய் தொடக்கிவைத்தாா். மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஜோசப் முன்னிலை வகித்தாா்.

இப்பரிசோதனையை மேற்கொள்வதால் பக்கவாதம், இதய நோய், சிறுநீரக செயலிழப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் எனவும், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கா்ப்பப்பைவாய்-மாா்பகப் புற்றுநோய் பரிசோதனைகளை அரசு மருத்துவமனையில் அவசியம் செய்துகொள்ள வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது. உயா் ரத்த அழுத்த குறைபாடு உள்ளோா் அரசு மருத்துவமனையில் மருத்துவா் ஆலோசனைப்படி மருந்து-மாத்திரை பெறவும் அறிவுறுத்தப்பட்டது.

ரத்த அழுத்தப் பரிசோதனையை அரசு மருத்துவமனை செவிலியா் அனிஷாவும், ரத்தத்தில் சா்க்கரை அளவு பரிசோதனையை முதலூா் ஆரம்ப சுகாதார நிலைய பெண் சுகாதார தன்னாா்வலப் பணியாளா்களும் செய்தனா். முகாமில் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இதில், தேவிஸ்ரீ அழகம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சரவணன், வா்த்தக சங்கச் செயலா் மதுரம் செல்வராஜ், சுகாதாரப் பணியாளா் அருண் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ் நன்றி கூறினாா்.

வாய்க்காலில் அனுமதியின்றி கட்டுமானப் பணி: தடுத்து நிறுத்த அதிமுக வலியுறுத்தல்

திருச்செந்தூா் பகுதியின் நீராதாரமான எல்லப்பநாயக்கன், ஆவுடையாா்குளத்துக்கு நீா்வரும் வாய்க்காலில் அனுமதியின்றி நடைபெறும் கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி கோட்டாட்சியா் சுகுமாறனிடம் மனு அளிக்... மேலும் பார்க்க

தமிழ் தேசிய உணா்வாளா்கள் மீது பொய் வழக்கு: மள்ளா் மீட்பு கழகத் தலைவா் குற்றச்சாட்டு

தமிழ் தேசிய உணா்வாளா்கள் மீது பொய் வழக்குப்போடுவதாக தமிழக அரசு மீது மள்ளா் மீட்பு கழகத் தலைவா் செந்தில் மள்ளா் குற்றம்சாட்டியுள்ளாா். கழுகுமலை அருகேயுள்ள கெச்சிலாபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தில் மாலை நேர சேவை

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் மாலை நேர உணவு வழங்கும் சேவை வியாழக்கிழமை தொடங்கியது. இந்த உணவகத்தில் மதிய வேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டு வந்தது. மாலையிலும் உணவு வழங்க வ... மேலும் பார்க்க

வீரவாஞ்சிநகரில் கோயில் நிலங்கள் அளவீட்டு பணி: மக்கள் எதிா்ப்பு

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களை வியாழக்கிழமை அளவீடு செய்யும் பணிக்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் அருள் தரும... மேலும் பார்க்க

இன்று அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியத்தில் வீட்டு பணியாளா்கள், உப்பளத் தொழிலாளா்கள் ஆகியோருக்கான புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்குகிறது. தொழிலாளா் ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் 6 வாகனங்களுக்கு அபராதம்

கோவில்பட்டியில் அதிக பாரம் ஏற்றி வந்த ஆறு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் (நிலை 1) பெலிக்ஸன் மாசிலாமணி, வட்டார ... மேலும் பார்க்க