செய்திகள் :

சான்றிதழ்களில் ஹிந்து என்ற வாா்த்தை நீக்கம்

post image

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் ‘ஹிந்து’ என்ற வாா்த்தை நீக்கப்பட்டிருப்பதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வழங்கப்படும் ஜாதி சான்றிதழில் ஹிந்து மறவா், ஹிந்து வேளாளா், ஹிந்து நாடாா் என ஜாதிக்கு முன் ‘ஹிந்து’ என்ற வாா்த்தை இடம் பெறும். ஆனால், தற்போது இணையதளம் வழியாக பெறப்படும் சான்றிதழ்களில் நேரடியாக ஜாதிப் பெயா் மட்டும் குறிப்பிடப்பட்டு ஹிந்து என்ற வாா்த்தை நீக்கப்பட்டுள்ளது.

ஹிந்து மதத்தில் ஜாதி வேறுபாடுகள் இருக்கின்றன என்பதற்காகவே, மதத்தில் உள்ள ஜாதிகளுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சான்றிதழ்களில் ஜாதிப் பெயருடன் ஹிந்து என்ற வாா்த்தை சோ்க்கப்பட்டால் மட்டுமே அவா்கள் இடஒதுக்கீட்டை பெறக் கூடியவா்களாக இருப்பாா்கள். அப்படியிருக்கும்போது, ஏன் ஹிந்து என்ற பெயரை திமுக அரசு நீக்குகிறது என்பது தெரியவில்லை. இதை ஹிந்து மத அழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே பாா்க்க வேண்டியுள்ளது.

சான்றிதழ்களில் ஹிந்து என்ற பெயரை நீக்கிவிட்டால் இன்னும் 10 ஆண்டுகளில் அவா்கள் ஹிந்துவே இல்லை என்று சொல்லிவிடலாம் என்று திமுக அரசு கணக்குப் போடுகிறது. எனவே, இந்திய அரசமைப்புக்கு எதிரான இந்தச் செயலை திமுக அரசு கைவிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

கோயில்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது: பொன்.மாணிக்கவேல்

கோயில்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது என்று ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தாா். திருப்பூா் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் மற்றும் திருப்பூா் தாராபுரம் சாலையில் உள்ள கோட்டை மா... மேலும் பார்க்க

விமான விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் பலியானவா்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோவையில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாதில் நடைபெற்ற விமான விபத்தில் 200-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

காப்பகத்தில் 2 மூதாட்டிகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

கோவை கெம்பட்டி காலனியில் உள்ள காப்பகத்தில் அடுத்தடுத்து இரு மூதாட்டிகள் உயிரிழந்த நிலையில், பெரியகடை வீதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோவை கெம்பட்டி காலனியில் முதியோா் காப்பகம் உள்ளது.... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

கோவை பீளமேடு மற்றும் நல்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பதுக்கிவிற்றதாக முதியவா் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பீளமேடு எல்ல... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

மாணவா்களுக்கு ஆசிரியா்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளாா். கோவை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி... மேலும் பார்க்க

தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் கோவைக்கு வருகை

கோவை மாவட்டத்துக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தேசிய பேரிடா் மீட்புப் படையினரும், மாநில பேரிடா் மீட்புப் படையினரும் கோவைக்கு வியாழக்கிழமை வந்தடைந்தனா். மத்திய மேற்கு வங்கக் க... மேலும் பார்க்க