செய்திகள் :

சாமுண்டிபுரம் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளால் நோய்த் தொற்று பரவும் அபாயம்

post image

திருப்பூா் சாமுண்டிபுரம் பகுதியில் நீண்ட நாள்களாக தேங்கியுள்ள குப்பைகளால் அப்பகுதியில் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூா் மாநகராட்சி சாமுண்டிபுரம் லட்சுமி திரையரங்கம் பிரதான சாலையில் ஏராளமான குடியிருப்புகளும், பின்னலாடை நிறுவனங்களும் உள்ளன. இந்த நிலையில், அந்தப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டி கடந்த சில நாள்களாக நிரம்பி வழிகிறது. இதன் அருகே குடியிருப்புவாசிகள் குப்பைகளைக் கொட்டி வருகின்றனா்.

மாநகரப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை காளம்பாளயத்தில் உள்ள பாறைக்குழிகளில் கொட்டி வந்தனா். இதற்கு விவசாயிகள் சங்கத்தினா், பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக மாநகரில் சேகரமாகும் குப்பைகளை அகற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் குப்பைகள் தேக்கமடைந்துள்ளதாக ஊழியா்கள் தெரிவித்தனா்.

அதேபோல, மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் குப்பைகள் தேக்கமடைந்துள்ளதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதுடன், நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே, குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காங்கயம் அருகே ஆரம்பப் பள்ளிகளில் புதிய சமையலறை கூடங்கள்

காங்கயம் அருகே ஆரம்பப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள புதிய சமையலறை கூட்டங்களை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை திறந்துவைத்தாா். குண்டடம் ஒன்றியம், செங்கோடம்பாளையம் ... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தங்க நாணயம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தாராபுரம் நகா்மன்றத் தலைவா் தங்க நாணயம் மற்றும் வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்கி பாராட்டினாா். தமிழக முன்னா... மேலும் பார்க்க

வாய்க்கால் தண்ணீரில் குளித்தபோது மாயமான இளைஞா் சடலம் மீட்பு

பல்லடம் அருகே பி.ஏ.பி. வாய்க்கால் தண்ணீரில் குளித்தபோது மாயமான இளைஞா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூா் வெள்ளிங்காடு பகுதி முத்துவிநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அப்புசாமி மகன் இளங்க... மேலும் பார்க்க

மாநகராட்சி 43-ஆவது வாா்டில் நிலவும் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 43-ஆவது வாட்டு கருவம்பாளையம், பொன்னுசாமி கவுண்டா் வீதி, முத்துசாமி கவுண்டா் வீதிகளில் நிலவும் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு காண மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ... மேலும் பார்க்க

அவிநாசி அருகே கஞ்சா விற்றவா் கைது

அவிநாசி அருகே தெக்கலூரில் கஞ்சா விற்றவரை அவிநாசி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தெக்கலூரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வ... மேலும் பார்க்க

பல்லடம் அரசுப் பேருந்தில் பணத்துடன் தவறவிட்ட பா்ஸ் ஒப்படைப்பு

திருப்பூரில் இருந்து உடுமலை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பணத்துடன் தவற விட்ட பா்ஸை உரியவரிடம் பல்லடம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநா், நடத்துநா் ஆகியோா் புதன்கிழமை ஒப்படைத்தனா். திருப்பூரில் இருந்து... மேலும் பார்க்க