செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு ரூ. 869 கோடி இழப்பு! வீரர்களின் ஊதியம் 90% குறைப்பு!

post image

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ. 869 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய பாகிஸ்தான் அணி வீரர்களின் ஊதியத்தில் 90 சதவிகிதத்தை குறைத்துள்ளனர்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி - 2025 போட்டிகள் பிப். 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

சுமார் 29 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியது. அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி விளையாடிய போட்டிகள் மட்டும் துபை மைதானத்தில் நடத்தப்பட்டது.

இந்த தொடரை நடத்துவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மொத்தம் ரூ. 869 கோடி செலவு செய்துள்ளனர். கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய மூன்று மைதானங்களை புணரமைக்கும் பணிகளுக்காக ரூ. 503 கோடி செலவு செய்துள்ளனர்.

ஆனால், லீக் ஆட்டங்களில் மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியது. இந்தியாவுக்கு எதிராக துபையில் விளையாடிய நிலையில், மற்றொரு போட்டி மழையால் ரத்தானது.

இதையும் படிக்க : உம்ரான் மாலிக் விலகல்

லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியதால் அரையிறுதி, இறுதி சுற்றுகளில் பாகிஸ்தான் அணி விளையாடவில்லை.

இதனால், மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளை காண பாகிஸ்தான் ரசிகர்கள் ஆர்வம் காட்டாததால் பெரும் இழப்பை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சந்தித்துள்ளது.

ஐசிசி நிதி, விளம்பரம் போன்றவை மூலம் வெறும் ரூ. 52 கோடி மட்டுமே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு வருவாயாக கிடைத்துள்ளது.

இதன்விளைவாக, சாம்பியன்ஸ் டிராபில் விளையாடிய பாகிஸ்தான் அணி வீரர்களின் ஊதியத்தில் 90 சதவிகிதமும் ரிசர்வ் வீரர்களின் ஊதியத்தில் 87.5 சதவிகிதமும் பிடித்தம் செய்துள்ளனர்.

காயத்திலிருந்து மீண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த சஞ்சு சாம்சன்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியின் பயிற்சி முகாமில் இணைந்தார்.ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐபிஎ... மேலும் பார்க்க

2-வது போட்டியிலும் வெற்றி; டி20 தொடரில் நியூசிலாந்து முன்னிலை!

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அ... மேலும் பார்க்க

ஹாரி ப்ரூக்குக்கு பிசிசிஐ விதித்த தடை கடுமையானதா? மொயின் அலி பதில்!

ஐபிஎல் தொடரில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஹாரி ப்ரூக் விளையாட பிசிசிஐ தடை விதித்தது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி பேசியுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேத... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய உம்ரான் மாலிக்; கேகேஆர் அணியில் மாற்று வீரர் சேர்ப்பு!

ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக உம்ரான் மாலிக் விலகியுள்ளார்.ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்ப... மேலும் பார்க்க

பஞ்சாப் கிங்ஸில் ஆப்கன் ஆல்ரவுண்டர் இணைவதில் தாமதம்; காரணம் என்ன?

ஐபிஎல் தொடருக்காக தயாராகி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் இணைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இன்னும் சில தினங்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளின் வீரர்க... மேலும் பார்க்க

கடந்த சீசனில் கேப்டன், இந்த முறை துணைக் கேப்டன்; தில்லி கேபிடல்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தில்லி கேபிடல்ஸ் அணியின் துணைக் கேப்டனை அந்த அணி நிர்வாகம் இன்று (மார்ச் 17) நியமித்துள்ளது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பி... மேலும் பார்க்க