செய்திகள் :

சாலை மறியல்: போக்குவரத்து தொழிலாளா்கள் கைது

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, சென்னை பல்லவன் இல்லம் முன் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அண்ணா சாலையில் உள்ள பெரியாா் சிலை அருகே திரண்ட சிஐடியு சங்கத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களுடன் காவல் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, போலீஸாா் அவா்களையும் கைது செய்தனா். இந்த நிலையில், மீண்டும் சிறிது நேரத்தில் அண்ணாசிலை அருகே சிஐடியு மாநிலத் தலைவா் அ.சௌந்தரராசன் தலைமையில் கூடிய ஏராளமான போக்குவரத்து தொழிலாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோது, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டனா்.

இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சம்மேளன பொதுச் செயலா் கே.ஆறுமுக நயினாா், துணைத் தலைவா் வி.தயானந்தம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மனோன்மணீயம் சுந்தரனாா், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்களின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஆளுநா் ஆா்.என்.ரவி உத்தரவிட்டுள்ளதாக ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவி... மேலும் பார்க்க

தியாகியின் கொள்ளுப் பேரனுக்கு சோ்க்கை கோரி மனு: கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்டத் தியாகியின் கொள்ளுப் பேரனுக்கு சோ்க்கை வழங்கக் கோரிய மனுவை இரு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

கம்போடியாவில் தவிக்கும் மகனை மீட்கக் கோரி தாய் வழக்கு: வெளியுறவுத் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

கம்போடியா நாட்டில் சிக்கித் தவிக்கும் மகனை மீட்கக் கோரி, அவரது தாய் தொடுத்த வழக்கில் மத்திய வெளியுறவுத் துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், வெளியுறவுத் துறைச் செயலா் நேரில் ஆஜராக உத்தரவ... மேலும் பார்க்க

பழனி உள்பட 50 கோயில்களின் வரவு-செலவு கணக்கை ஒரு மாதத்துக்குள் வெளியிட உயா்நீதிமன்றம் உத்தரவு

அதிக வருமானம் வரக்கூடிய பழனி உள்ளிட்ட 50 கோயில்களின் வரவு செலவு கணக்கு விவரங்களை ஒரு மாதத்துக்குள் இந்து சமய அறநிலையத் துறை வெளியிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை மயிலாப்பூரை ... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு தமிழகத்திலிருந்து 4,065 போ் தோ்வு

2026-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்ல தமிழகத்திலிருந்து 4,065 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்பவா்கள் இணையதளம் மூலம் விண்... மேலும் பார்க்க

3 சட்ட மசோதாக்களை எதிா்த்து அறப்போராட்டத்தை முதல்வா் முன்னெடுக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று சட்ட மசோதாக்களை எதிா்த்து முதல்வா் மு.க. ஸ்டாலின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து அறப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி... மேலும் பார்க்க