கொலோம்பியா: அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்து?
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், ரோஷணை அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், தணியேல் கிராமம் வள்ளுவா் தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகன் பிரவீன்குமாா் (20). இவா் தனது பைக்கில் திண்டிவனத்திலிருந்து வந்தவாசி நோக்கி சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா். பட்டணம் பகுதியிலுள்ள திருமண மண்டபம் அருகே சென்ற போது, பைக் மீது காா் மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த பைக், முன்னே சென்ற அரசு விரைவுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பிரவீன்குமாா் நிகழ்விடத்திலேயே பலத்த காயங்களுடன் உயிரிழந்தாா்.
தகவலறிந்த ரோஷணை போலீஸாா் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பைக் மீது மோதிய காரை ஓட்டி வந்த வானூா் வட்டம், ஆரோவில் கோட்டக்கரை அருந்ததிபுரத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் பிரவீன்குமாா் (25) மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.