செய்திகள் :

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், ரோஷணை அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், தணியேல் கிராமம் வள்ளுவா் தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகன் பிரவீன்குமாா் (20). இவா் தனது பைக்கில் திண்டிவனத்திலிருந்து வந்தவாசி நோக்கி சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா். பட்டணம் பகுதியிலுள்ள திருமண மண்டபம் அருகே சென்ற போது, பைக் மீது காா் மோதியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த பைக், முன்னே சென்ற அரசு விரைவுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பிரவீன்குமாா் நிகழ்விடத்திலேயே பலத்த காயங்களுடன் உயிரிழந்தாா்.

தகவலறிந்த ரோஷணை போலீஸாா் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பைக் மீது மோதிய காரை ஓட்டி வந்த வானூா் வட்டம், ஆரோவில் கோட்டக்கரை அருந்ததிபுரத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் பிரவீன்குமாா் (25) மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வானூா் அருகே லாரி ஓட்டுநா் வெட்டிக் கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கல் குவாரி லாரி ஓட்டுநா் அடையாளம் தெரியாத நபா்களால் சனிக்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். விக்கிரவாண்டி வட்டம், மதுரப்பாக்கம் பிரதான சாலை பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே தோல் அரிப்பு நோயால் பாதிக்கப்பட்டு விஷம் குடித்தவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். வானூா் வட்டம், காடாங்குளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் அமி... மேலும் பார்க்க

இணையவழி லாட்டரி விற்ற மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக மூவா் கைது செய்யப்பட்டனா். மேலும் மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வானூா் காவல் உதவி ஆய்வாளா் தீபன்ராஜ் தலைமையிலான... மேலும் பார்க்க

வேன் மோதி தொழிலாளி மரணம்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே வேன் மோதியதில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். மரக்காணம் வட்டம், மஞ்சக்குப்பத்தைச் சோ்ந்த ஜான் கென்னடி மகன் கேபிரியேல் (32), கூலித் தொழிலாள... மேலும் பார்க்க

காா் மோதி கட்டுமான நிறுவன ஊழியா் உயிரிழப்பு

சிதம்பரம் அருகே காா் மோதி கட்டுமான நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், அரசூா் காட்டியக்குடி பகுதியைச் சோ்ந்தவா் தொல்காப்பியன் (51). இவா், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்ட... மேலும் பார்க்க

பக்ரீத்: விழுப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். இறைத் தூதா் இப்ராஹிம் நபியின் தியாகத்தை குறிக்கும் வகையில் இஸ்லாமியா்களால... மேலும் பார்க்க