சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
அனுமந்தன்பட்டி ஆா்.சி தெருவைச் சோ்ந்த பாக்கியம் மனைவி பிச்சைம்மாள் (65). இவா், உத்தமபாளையத்தில் இறந்த தனது பேரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றாராம். அங்குள்ள திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாகச் சென்ற அடையாள தெரியாத வாகனம் மோதியதில் சம்பவயிடத்திலே உயிரிழந்தாா். இது குறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.