செய்திகள் :

சாலைகளை விரிவாக்கியதற்காகவா சுங்கச்சாவடிகள்? மக்கள் வேதனை

post image

சென்னை: வேலூர் - திருவண்ணாமலை - விழுப்புரம் இடையேயான 110 கி.மீ. தொலைவுள்ள தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டில் 1.5 மீட்டர் அளவுக்கு விரிவுபடுத்திவிட்டு, 3 சுங்கச்சாவடிகளை வைத்து சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுங்சாலைகள் துறை பல கோடி சுங்கக் கட்டணம் வசூலித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு விரிவுபடுத்தப்பட்ட வேலூர் - திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே கடந்த 20 மாதங்களில் அதாவது 2023 ஏப்ரல் முதல் 2024 நவம்பர் வரை மூன்று சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா ரூ.36 கோடி. இந்த மூன்று சுங்கச்சாவடிகளில் மாதந்தோறும் சராசரியாக வசூலிக்கப்படும் தொகை ரூ.1.82 கோடி.

இந்த திட்டத்துக்கு மத்திய அரசு செலவிட்ட மொத்த தொகையே ரூ.273 கோடிதான் என்று எக்ஸ்பிரஸ் குழுமம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலாகக் கிடைத்துள்ளது.

ஏற்கனவே இருந்த 5 மீட்டர் அகல சாலை தற்போது 8.5 மீட்டர் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு 2023 ஜனவரி முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஒரு தேசிய நெடுஞ்சாலைக்கான எந்தத் தகுதிகளும் இந்த வழித்தடத்தில் இல்லை என்றும், பல இடங்களில் சாலை ஆக்ரமிப்புகள், மேம்பால வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டுகளோடு, சுங்கக் கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள் வாகன ஓட்டிகள். அது மட்டுமல்ல, மோசமான சாலை அமைப்பினால் இங்கு ஒரு ஆண்டில் 244 விபத்துகள் நேரிட்டிருப்பதாகவும் 18 பேர் மரணமடைந்திருப்பதாகவும் 54 பேர் காயமடைந்திருப்பதாகவும் தரவுகள் கூறுகின்றன.

சாலையின் தரத்தை மேம்படுத்தாமல், சுங்கச் சாவடிகைள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், மாநில அரசின் நிதியில் உருவாக்கப்படும் சாலைகளில் சுங்கச்சாவடிகள் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டும் வாகன ஓட்டிகள், மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் சாலை அமைத்துவிட்டு, சாலை அமைத்ததற்கும் மக்களிடமிருந்தே கட்டணமும் வசூலிக்கும் மத்திய அரசு, அதற்கேற்ற வசதிகளையாவது ஏற்படுத்த வேண்டாமா என்பதே வாகன ஓட்டிகளின் கேள்வியாக மாறியிருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பார்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது நிருபர்தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடர்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பார்வையிட புதிதாக அமைக்கப... மேலும் பார்க்க

தோ்வா்களிடம் லஞ்சம்: 5 ரயில்வே அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ

தோ்வா்களிடம் லஞ்சம் பெற்ற வழக்கில், 5 ரயில்வே அதிகாரிகள் உள்பட 6 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இதுதொடா்பாக சிபிஐ புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மேற்கு ரயில்வேயின் துறை சாா்ந்த தோ்வில், தோ... மேலும் பார்க்க

ஓய்வூதியா்களுக்கு ஊதிய ஒப்பந்த பலன் வழங்க அரசிடம் நிதி கேட்கக் கூடாது: போக்குவரத்துத் துறை செயலா் உத்தரவு

ஓய்வூதியா்களுக்கு ஊதிய ஒப்பந்த பலன் வழங்க அரசிடம் நிதி கேட்கக் கூடாது என போக்குவரத்து துறைச் செயலா் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் அ... மேலும் பார்க்க

நாளைமுதல் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.21) முதல் பிப்.23-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற... மேலும் பார்க்க

2,642 மருத்துவா் பணி நியமன நடவடிக்கைளில் தகுதியற்ற 400 போ் பங்கேற்றதாக புகாா்

தமிழக அரசு மருத்துவமனைகளில் 2,642 மருத்துவா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், அதற்கான சான்றிதழ் சரிபாா்ப்பில் தகுதியில்லாத 400 போ் பங்கேற்ாக புகாா் எழுந்துள்ளது. உரிய காலகட்டத்துக்குள் அவா்கள் ம... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடம் பிடிப்போம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதி

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டை விரைவில் முதலிடம் பிடிக்கச் செய்வோம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா். 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 158... மேலும் பார்க்க