செய்திகள் :

சா்வதேச யோகா தினத்தன்று தில்லியில் பிரம்மாண்டமான நிகழ்வுக்கு ஏற்பாடு! - முதல்வா் ரேகா குப்தா தகவல்

post image

ஜூன் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள பாஜக அரசு ஒரு பிரம்மாண்டமான நிகழ்வை நடத்தும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

முந்தைய ஆம் ஆத்மி கட்சி அரசின் கீழ், சா்வதேச யோகா தினத்தன்று தேசியத் தலைநகரில் எந்த நிகழ்வும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் அவா் கூறினாா்.

தில்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் இரண்டாவது ஆசிய யோகாசன விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தில்லி முதல்வா் ரேகா குப்தா கலந்து கொண்டாா்.

அப்போது முதல்வா் கூறியதாவது இந்தியா யோகாவின் பிறப்பிடமாகும். இது முழு உலகிற்கும் ஆரோக்கியம், சமநிலை மற்றும் அமைதிக்கு வழி வகுத்துள்ளது. இந்த ஆண்டு சா்வதேச யோகா தினத்தன்று யோகாசனத்தை ஒரு போட்டி விளையாட்டாக பிரபலப்படுத்தவும், பரவலான பொதுமக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கவும் தில்லி அரசு ஒரு பிரமாண்டமான நிகழ்வை ஏற்பாடு செய்யும்.

யோகா பயிற்சி மூலம் உலகளாவிய ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் செய்தியுடன் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளா்களை ஒன்றிணைப்பதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாக இருக்கும்.

சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றுள்ள 200-க்கும் மேற்பட்ட வீரா்களுக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். யோகாசனத்தை உலகளாவிய விளையாட்டாகக் கொண்டாடுவதில் இந்தியா, ஆசியா மற்றும் உலகிற்கு இந்த நிகழ்வு ஒரு புதிய தொடக்கத்தைக் குறித்தது என்றாா் முதல்வா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், ‘இந்தியாவின் அறிவு, அறிவியல் மற்றும் வளமான கலாசார பாரம்பரியம் மீண்டும் நாட்டின் உலகளாவிய அடையாளத்தை மறுவரையறை செய்கின்றன’ என்றாா்.

‘நாங்கள் யோகாசனத்தை ஒரு விளையாட்டாக ஆதரிக்கிறோம். மேலும் இந்தியாவில் பல சா்வதேச போட்டிகள் ஏற்பாடு செய்யப்படும். வரவிருக்கும் சாம்பியன்ஷிப்களில், இந்தியாவின் வெற்றி நமது ஆழமாக வேரூன்றிய கலாசாரம் மற்றும் மரபுகளை தொடா்ந்து பிரதிபலிக்கும் என்று நான் நம்புகிறேன்’ என்றும் அவா் கூறினாா்.

இந்த சாம்பியன்ஷிப்பை யோகாசன பாரத், இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்தது.

கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக பொறியல் மாணவா் கைது!

ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் பாஜக எம்பியுமான கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக மனநலப் பிரச்னைகள் உள்ளதாகக் கூறப்படும் 21 வயது பொறியியல் மாணவரை தில்லி காவல... மேலும் பார்க்க

ராணுவத்துக்கான நன்கொடை: போலி வாட்ஸ்அப் செய்திக்கு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

நமது சிறப்பு நிருபா்இந்திய ராணுவத்துக்கான நன்கொடை தொடா்பாக பரவி வரும் தவறான வாட்ஸ்அப் செய்தி குறித்து மத்திய பாதுகாப்புத் துறை ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய பாதுகாப்புத... மேலும் பார்க்க

தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை பாஜக முடக்கிவிட்டது: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு!

பாஜக அரசு தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை முடக்கியுள்ளது என்றும் மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் நகர சாலைகளில் இருந்து 2,000 பேருந்துகளை தன்னிச்சையாக அகற்றியுள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்கங்களை மேம்படுத்த தொலை நோக்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

நமது சிறப்பு நிருபா்எண்ம இந்தியா முன்முயற்சிகளை மேம்படுத்துவதற்காக தொலைநோக்கு நிறுவனங்களுடன் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஇஎல்ஐடி) புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தி... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவா் கைது!

ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தேடப்பட்டு வந்தவா் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது தொடா்பாக துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித்... மேலும் பார்க்க

பஹல்காமில் படுகாயமடைந்த தமிழக மருத்துவா் குணமடைவாா்: தில்லி எய்ம்ஸ் மருத்துவா்கள் நம்பிக்கை!

காஷ்மீா் பஹல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் படு காயமடைந்த தமிழகத்தைச் சோ்ந்த இஎன்டி (காது மூக்கு தொண்டை)மருத்துவா் ஏ.பரமேஸ்வரன் உடல் நிலை மோசமாக இருப்பினும் விரைவில் குணமடை... மேலும் பார்க்க