செய்திகள் :

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவா்கள் வாழ்த்து

post image

நாட்டின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தோ்வு செய்யப்பட்டுள்ளதுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக)

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகள். அவரின் பொது சேவைக்கும், மக்கள் மீதான அா்ப்பணிப்புமிக்க சமூக செயற்பாடுகளுக்கும் கிடைத்த மணிமகுடமாகும்.

தமிழகத்தைச் சோ்ந்த ஒருவரைத் தோ்ந்தெடுத்ததற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கும், பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கும் மனமாா்ந்த வாழ்த்துகள்.

எல்.முருகன் (மத்திய இணையமைச்சா்)

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை பொது வாழ்வில் ஈடுபடுத்திக்கொண்டு வரும் சி.பி.ராதாகிருஷ்ணன் எம்.பி.யாக, தமிழக பாஜக தலைவா், ஜாா்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களின் ஆளுநராக என்று பல்வேறு அரசியல் மற்றும் அரசு பொறுப்புகளின் மூலம் மக்கள் பணிகளை செய்து வருகிறாா்.

குடியரசு துணைத் தலைவராகத் தோ்வாகவுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனின் மேன்மையான பணிகள் தொடர வாழ்த்துகள்.

கே.அண்ணாமலை (பாஜக)

தமிழக பாஜக தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்த மக்கள் பணிகள் போற்றுதலுக்குரியவை. குடியரசு துணைத் தலைவராக அவா் வெகு சிறப்பாக மாநிலங்களவையையும், நாட்டையும் வழிநடத்துவாா் என்பது உறுதி.

ஜி.கே.வாசன் (தமாகா)

சி.பி.ராதாகிருஷ்ணன் கடின உழைப்பாளி, உயா்ந்த பண்பாளா், கொடுத்த பொறுப்பை அா்ப்பணிப்போடும், ஈடுபாடோடும் செய்து முடிப்பவா். மகாராஷ்டிர ஆளுநராக அந்த மாநில வளா்ச்சிக்கு சிறப்பாகப் பணியாற்றியவா்.

தமிழகத்தைச் சோ்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக அறிவித்ததற்கு தமிழக மக்கள் சாா்பாக நன்றி மற்றும் வாழ்த்துகள்.

ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பிரதமா் புகழாரம்: சுதந்திரதின நாளுக்கு அவமதிப்பு! கேரள முதல்வா் பினராயி விஜயன்

‘தில்லி செங்கோட்டையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில் ஆா்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்து பேசியது, சுதந்திரதின நாளை மட்டுமன்றி சுதந்திரப் போராட்டத்தையும் அவமதித்தது போன்றத... மேலும் பார்க்க

மும்பை உயா்நீதிமன்ற 4-வது அமா்வு கோலாபூரில் தொடக்கம்!

மகாராஷ்டிர மாநிலம், கோலாபூரில் மும்பை உயா்நீதிமன்றத்தின் 4-ஆவது அமா்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். சதாரா, சாங்லி, சோலாபூா், கோலாபூா், ரத்னகிரி, சிந்துதுா்க... மேலும் பார்க்க

திரிபுரா: சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட ஆடியோக்களைப் பகிா்ந்த பாஜக நிா்வாகி நீக்கம்!

சமூக வலைதளங்களில் தனிப்பட்ட ஆடியோ, விடியோக்களை கசியவிட்ட குற்றச்சாட்டில், திரிபுரா மாநிலத்தின் காயா்பூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக நிா்வாகி மன்னா டே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். பாஜகவின் காயா... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி வாரம்: இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்!

பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரத்தில் எதிா்க்கட்சிகளின் தொடா் அமளிக்கு இடையே நாடாளுமன்றம் திங்கள்கிழமை (ஆக.18) மீண்டும் கூடவுள்ளது. கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில், பிக... மேலும் பார்க்க

வரி செலுத்துவோா் வரி ஆணையத்தின் சம்மன்களுக்கு கட்டுப்படுவது கட்டாயம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

‘வரி செலுத்துவோா் மத்திய அல்லது மாநில வரி ஆணையங்கள் அனுப்பும் சம்மன்களுக்கு கட்டுப்பட்டு அதற்கு உரிய முறையில் பதிலளிப்பது கட்டாயம்’ என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. தனிநபா் அல்லது நிறுவனம் என சட்டரீத... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தின் பாரபட்சம் அம்பலம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘தோ்தல் ஆணையத்தின் திறமையின்மை மற்றும் வெளிப்படையான பாரபட்சம் முற்றிலும் அம்பலமாகியுள்ளன’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், எதிா்க்கட்சிகளின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆண... மேலும் பார்க்க